தெலுங்கு இயக்குநர் அனுதீப் குமார் இயக்கத்தில் நடிகர் சிவகார்த்திகேயன் முதல் முறையாக நடித்து வெளியாகிய திரைப்படம் தான் பிரின்ஸ். இத்திரைப்படத்தில் மரியா என்னும் உக்ரைன் நாட்டு நடிகை நடித்திருந்தார். மழகந்த எதிர்பார்ப்பின் மத்தியில் வெளியாகிய இப்படம் கலவையான விமர்சனங்களையே பெற்றது.
இந்திய நபருக்கும் பிரிட்டிஷ் நாயகிக்கும் ஏற்படும் காதலை மையப்படுத்தி அழகாக எடுக்கப்பட்ட ஒரு திரைப்படம் தான் இது. இப்படத்திற்கு இசையமைப்பாளர் தமன் இசையமைத்திருந்தார். இப்படம் தமிழ் மற்றும் தெலுங்கு ஆகிய மொழிகளில் வெளியாகியிருந்தது.
மேலும் இப்படம் 7 நாள் முடிவில் உலகம் முழுவதும் ரூ. 42 கோடி வரை வசூல் சாதனை செய்துள்ளதாம். அடுத்தடுத்து எந்த ஒரு பெரிய நடிகரின் பட ரிலீஸும் இல்லை என்பதால் படத்திற்கு வசூல் வரும் நாட்களில் அதிகரிக்கும் என்றும் புதிய தகவல் வெளியாகியுள்ளது.
இதனை அடுத்து சிவகார்த்திகேயன் நடிப்பில் மாவீரன் மற்றும் அயலான் ஆகிய திரைப்படங்கள் உருவாகி வருகின்றது.விரைவில் இப்படங்கள் ரிலீஸாகக் காத்திருக்கின்றன என்பதும் முக்கியமாகும்.
Listen News!