தமிழ் சினிமாவின் முக்கிய நடிகையாக திகழ்ந்து வரும் நடிகை நயன் தாராவின் வாடகைத்தாய் மூலம் பெற்ற இரட்டை குழந்தைகள் பற்றி தான் தற்போதைய ஹொட் டாப்பிக்காக உள்ளது.
இயக்குநரான விக்னேஷ் சிவனை திருமணம் செய்து கொண்ட 4 மாதத்தில் இரட்டை குழந்தை அதுவும் வாடகைத்தாய் மூலம் பெற்றது விதிமுறைகளின் படி சட்டப்படி தவறு என்று பல விமர்சனங்கள் எழுந்த வண்ணம் உள்ளது.
மேலும் இதுகுறித்து தனிக்குழு அமைத்து விசாரனை செய்து வருகிறது தமிழக அரசு. முயன்றால் விக்னேஷ் சிவனையும் நயன் தாராவையும் விசாரணைக்கு அழைத்து விசாரிக்கவும் உத்தவிட்டுள்ளது.
இவ்வாறுஇருக்கையில் நயன் தாரா - விக்னேஷ் சிவனின் இந்த பிரச்சனைக்கு தாலிக்கட்டிய நேரம் சரியில்லை என்று அப்பவே ஜோதிடர் கூறியிருந்ததாக செய்திகள் பரவி வருகின்றது. ஜூன் 9 ஆம் தேதி நயன்தாராவிற்கு 10.20 மணிக்கு தாலிக்கட்டியுள்ளார் விக்னேஷ் சிவன் என கூறப்படுகின்றது.
ஆனால் வியாழக்கிழமை 10. 11 மணி வரை புதன்ஹோரை நேரமாக இருந்துள்ளது. மேலும் அந்த நேரம் திருமணம் நடந்துள்ளது. கெளரி பஞ்சாங்கத்தின் படி பார்த்தால் அந்த நேரம் சோரம்(அசுவ முகூர்த்தம்) நேரமாம்.
அப்படியென்றால் எது தொட்டாலும் எதாவது தடை ஏற்பட்டு நின்று போகும் என்பதை குறிக்குமாம். இதனால் தான் திருமணத்தின் போதும் திருமணத்திற்கு பின் நெட்பிளிக்ஸ் நிறுவனத்துடன் கோடியில் பிரச்சனை ஏற்பட்டும் தற்போது வாடகைத்தாய் குழந்தை பிரச்சனையும் உருவாகியுள்ளதாம் என கூறப்படுகின்றது.
மேலும் இதை முன்பே ஜோதிடர் ஒருவர் கணித்தும் கூறியிருந்தாராம். இதற்காகத்தான் திருமணம் முடிந்து திருமணத்திற்கு முன்பு கோவில் கோவிலாக ஏறி இறங்கி இருக்கிறார்கள் நயன் - விக்கி.
Listen News!