சீரியல்கள் மூலம் குழந்தை நட்சத்திரமாக தன்னுடைய திரையுலக பயணத்தைத் தொடங்கி தற்போது முன்னணி நடிகைகளில் ஒருவராக திகழ்ந்து வருபவர் நடிகை நிவேதா தாமஸ். அதாவது இவர் 2008-ஆம் ஆண்டு முதல் குழந்தை நட்சத்திரமாக நடிக்கத் தொடங்கியிருக்கின்றார்.
பல குழந்தை நட்சத்திரப் படங்களில் நடித்திருந்தாலும் இவருக்கு நடிகை என்ற அந்தஸ்தைக் கொடுத்த படம் 'ப்ரணயம்'. இத்திரைப்படம் 2011-ஆம் ஆண்டு வெளியானது. அதே ஆண்டு தமிழில் 'போராளி' என்ற திரைப்படம் மூலம் தமிழில் கதாநாயகியாகவும் அறிமுகமானார் நிவேதா தாமஸ்.
அதனைத் தொடர்ந்து தமிழ், தெலுங்கு, மலையாளம் உள்ளிட்ட பல மொழிப் படங்களிலும் நடித்து வருகிறார். மேலும் தமிழில் விஜய்யுடன் 'ஜில்லா', கமலுடன் 'பாபநாசம்', ரஜினி 'தர்பார்' உள்ளிட்ட படங்களில் பல முன்னணி நட்சத்திரங்களுடன் இணைந்து நடித்துள்ளார்.
இவர் தெலுங்கில் நானியுடன் சேர்ந்து ஜென்டில்மேன் என்ற திரைப்படத்தில் நடித்தார்.இது நிவேதாவுக்கு தெலுங்கில் முதல் படமாக இருந்தாலும் அடுத்தடுத்து சில படங்களில் நானிக்கு ஜோடியாக நடித்தார். இதனால் நிவேதா மற்றும் நானி காதலிப்பதாக டோலிவுட் வட்டாரத்தில் கிசுகிசுக்கப்பட்டது..
ஆனால் நிவேதா தாமஸ் தன்னை பற்றி பரவிய வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்ததோடு நானும் நானியும் நல்ல நண்பர்கள் என்று தெரிவித்து இருந்தார். இந்த வதந்திகள் அடங்கிய நிலையில், மலையாள சினிமாவில் பல படங்களில் நடித்துக் கொண்டிருந்த நிவேதா மலையாள நடிகர் ஒருவருடன் காதலில் விழுந்தார். அந்த மலையாள நடிகரை சின்சியராக காதலித்த நிவேதா அவரை திருமணம் செய்து கொள்ள வேண்டுமென்று முடிவு செய்துள்ளார்.
ஆனால் நிவேதாவின் பெற்றோர் அந்த காதலுக்கு மறுப்பு தெரிவித்து விட்டனர்.எனினும் இதன் காரணமாக தன்னுடைய காதலை கைவிட்ட நிவேதா தன்னுடைய கேரியரில் கவனம் செலுத்தினார். மேலும் காதல் கிசுகிசுக்கள் குறித்து ஒரு முறை நிவேதாவிடம் செய்தியாளர்கள் கேட்டபோது நான் யாரையும் காதலிக்கவில்லை என்றும் எனக்கு இப்போது பட வாய்ப்புகள் அதிக அளவில் வருவதால் என்னுடைய கேரியரில் மட்டுமே கவனம் செலுத்துகிறேன் என்றும் தெரிவித்தார். அதோடு காதல் மற்றும் திருமணம் குறித்த பேச்சுக்கே தற்போது இடம் கிடையாது எனவும் நிவேதா கூறினார்.
Listen News!