• May 12 2024

அசோக் செல்வன் - கீர்த்தி பாண்டியனுக்கு இயக்குநர் பா. ரஞ்சித் வழங்கிய சூப்பர் பரிசு- ட்ரெண்டாகும் வீடியோ

stella / 7 months ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக விளங்குபவர் தான் அசோக் செல்வன். விஜய் சேதுபதி நடிப்பில் வெளியான சூது கவ்வும் திரைப்படத்தின் மூலம் அறிமுகமாகினார்.தொடர்ந்து பல படங்களில் நடித்து வந்த இவர் இறுதியாக சரத்குமாருடன் இணைந்து போர் தொழில் என்னும் படத்தில் நடித்திருந்தார்.இப்படம் சூப்பர் ஹிட் வெற்றியும் பெற்றது.

இவர் நடிகை கீர்த்தி பாண்டியனை காதலித்து இன்றைய தினம் திருமணம் செய்து கொண்டார். இவர்களின் திருமணம் மிகவும் சிறப்பாக நடைபெற்றது. மணமகளின் சொந்த ஊரான நெல்லை மாவட்டத்தில் உள்ள இட்டேரியில் இன்று திருமணம் நடைபெற்றது.இவர்களின் திருமணத்தில் இரு வீட்டாரும், நெருங்கி நண்பர்கள் சிலரும் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினார்கள்.


இவர்கள் திருமணம் தொடர்பான புகைப்படங்கள் சோஷியல் மீடியாவில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் கவனம் ஈர்த்தன. இருவரும் சிறப்பாக இப்போது போல் எப்போதும் சந்தோஷமாக வாழ வேண்டும் என ரசிகர்கள் தொடர்ந்து வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். அத்துடன் திரையுலக பிரபலங்களும் அசோக் செல்வன், கீர்த்தி பாண்டியன் தம்பதியினருக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

அசோக் செல்வன், கீர்த்தி பாண்டியன் இருவரும் 'ப்ளூ ஸ்டார்' என்ற படத்தில் இணைந்து நடித்துள்ளனர்.ஜெயக்குமார் இயக்கியுள்ள இந்தப்படத்தில் சாந்தனு பாக்யராஜ், பகவதி பெருமாள் உள்ளிட்ட பலர் இணைந்து நடித்துள்ளனர். பா. ரஞ்சித்தின் நீலம் புரொடக்ஷன் இந்தப்படத்தை தயாரித்துள்ளது. எனவே இப்படத்தின் 'ரயிலின் ஒலிகள்' என்ற பாடல் தற்போது வெளியாகியுள்ளது. 


 இந்த பாடலின் வீடியோவை இயக்குநர் பா. ரஞ்சித் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டு மணமக்களுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார். அதில், 'எங்கள் அன்பான அசோக் செல்வன், கீர்த்தி பாண்டியன் ஜோடிக்கு எங்கள் சிறப்பு பரிசை வெளியிடுகிறோம். உங்கள் இருவருக்குமே வாழ்த்துக்கள்' என குறிப்பிட்டுள்ளார் பா. ரஞ்சித். இந்தப்பாடல் வீடியோ தற்போது சோஷியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.


Advertisement

Advertisement

Advertisement