• Jun 11 2025

சீதாவுக்காக விஜயாவிடம் மண்டாடும் அருண் அம்மா! முத்துவிடம் நீலிக்கண்ணீர் வடிக்கும் மீனா

subiththira / 17 hours ago

Advertisement

Listen News!

சிறகடிக்க ஆசை சீரியலில் இன்று, முத்து மீனாவைப் பாத்து சீதா கல்யாணத்தைப் பற்றி கதைக்கச் சொல்லி நீதான் உன்ர அம்மாவ அனுப்பியிருக்கிற என்று சொல்லுறார். அதுக்கு மீனா, எல்லாம் தெரிஞ்ச மாதிரி பேசாதீங்க நான் அம்மாவ ஏன் வேலை செய்யுற இடத்துக்கு எல்லாம் அனுப்ப போறேன் முதலில அம்மா அங்க வந்து என்ன சொன்னாங்கனு சொல்லுங்க என்கிறார்.

இதனை அடுத்து முத்து, உனக்கு உண்மையிலேயே எந்த விஷயமும் தெரியாதா என்கிறார். அதுக்கு மீனா அப்பா சாமி நீங்க சொல்லுறெண்டால் சொல்லுங்க இல்லாட்டி பேசாமல் இருங்க என்கிறார். பின் மீனா சின்ன வயசில இருந்து அவளை நான் தான் வளர்க்கிறேன் அவள் விருப்பபடுறது நடக்கணும் என்று எனக்கும் ஆசை இருக்கு என்கிறார்.  அதுக்கு முத்து எனக்கு எப்பவுமே ஒரே முடிவு தான் சீதாவோட வாழ்க்கை நல்லா இருக்கணும் அதுக்காக நான் என்னவேணும் என்றாலும் செய்வேன் என்கிறார்.

அதைத் தொடர்ந்து விஜயா தன்ர பிள்ளைகளுக்கு டான்ஸ் பழக்கிக் கொண்டிருக்கிறார். அந்த நேரம் பாத்து அவரைப் பார்க்க அருணின்ட அம்மா வந்து நிற்கிறார். பின் விஜயா என்ன விஷயமாக என்னைப் பார்க்க வந்தனீங்க என்று கேட்கிறார். அதனை அடுத்து சீதாவோட விஷயமாக கதைக்க தான் வந்தனான் என்கிறார் அருணோட அம்மா. 

பின் விஜயா சீதாவோட குடும்பம் கூலிக்கு உழைக்கிறவ அந்தக் குடும்பத்திலயா போய் பொண்ணை எடுக்கிறீங்க என்கிறார். அதைக் கேட்ட அருணோட அம்மா நல்ல காரியம் ஒன்று தடைப்படுது அதுவும் உங்கட பிள்ளையால, அதை சொல்ல வந்தால் நீங்க என்னடா என்றால் இப்புடிக் கதைக்கிறீங்க என்கிறார். இதனை அடுத்து விஜயா வீட்டில திருஷ்ட்டி கழிக்கணும் என்று பூசாரியைக் கூட்டிக்கொண்டு வாறார். இதுதான் இன்றைய எபிசொட்.

Advertisement

Advertisement