• May 07 2024

மனைவியை அடித்துத் துன்புறுத்திய அர்னவ்- போலீஸ் ஸ்டேஷனில் ரசிகைகளுடன் போட்ட கும்மாளம்

stella / 1 year ago

Advertisement

Listen News!

சன்டிவியில் ஒளிபரப்பாகும் செவ்வந்தி என்னும் சீரியலில் நடித்து வருபவர் தான் நடிகை திவ்யா. இவர் தன்னுடன் கௌடி கண்மணி சீரியலில் ஒன்றாக நடித்த நடிகர் அர்னவ்வை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.அர்னவ் செல்லம்மா சீரியலில் கதாநாயகனாக நடித்து வருகின்றார்.

மேலும் திவ்யா கடந்த மாதம் தனக்கு திருமணம் நடந்ததாகவும் தான் மூன்று மாதம் கர்ப்பமாகியிருப்பதாகவும் அறிவித்திருந்தார். இந்த நிலையில் அர்னவ் செல்லம்மா சீரியல் கதாநாயகி அன்சிதாவுடன் தொடர்பில் இருப்பதாகவும் தன்னை அடிக்கடி துன்புறுத்துவதாகவும் தெரிவித்திருந்தார்.


அத்தோடு நேற்று முன்தினம் இரவு கணவன்-மனைவி இடையே ஏற்பட்ட தகராறில் அர்னவ் அவரை அடித்ததில் கீழே விழுந்த திவ்யாவின் கரு எப்போது வேணும் என்றாலும் கலையலாம் என்பதால் மருத்துவமனையில் அனுமதிக்கப் பட்டு சிகிச்சை பெற்று வருவதாகவும் ஓர் வீடியோ வெளியிட்டிருந்தார்.

இது தொடர்பாக அர்னவ் பத்திரிகையாளர்களை சந்தித்து திவ்யாவுக்கு தான் அடிக்கவில்லை என்றும் அவருக்கு ஈஸ்வரன் என்பவருடன் தொடர் இருப்பதாகவும் தெரிவித்திருந்தார். இந்த நிலையில் சென்னை கீழ்ப்பாக்கம் அரசு  ஆஸ்பத்திரி நிர்வாகம் அளித்த தகவலின் பேரில் போரூர் மகளிர் போலீசார் நடிகை திவ்யாவிடம் விசாரித்து வருகின்றனர்.


இந்நிலையில் நடிகர் அரணவ், தனது மனைவி திவ்யா மீது ஆவடி மாநகர போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் புகார் மனு ஒன்றை நேற்று அளித்தார். இந்த புகார் மனு குறித்து விசாரிக்கும்படி போரூர் அனைத்து மகளிர் போலீசாருக்கு அனுப்பி வைக்கப்பட்டது. 

அதன்பேரில் போரூர் உதவி கமிஷனர் ராஜூவ் பிரின்ஸ் ஆரோன், மாங்காடு போலீஸ் நிலையம் வந்தார். அவரிடம் நடிகை திவ்யா அளித்த புகார் தொடர்பாகவும், ஆவடி கமிஷனர் அலுவலகத்தில் அவர் அளித்த புகார் தொடர்பாகவும் போலீசார் விசாரணை நடத்தினர்.

 இதற்கிடையே விசாரணைக்கு பின் வெளியே வந்த நடிகர் அர்னவ் உடன் பெண் ரசிகைகள் ஆர்வத்துடன் புகைப்படம் எடுத்துக்கொண்டனர். அப்போது அர்னவ் சிரித்த முகத்துடன் போஸ் கொடுத்திருக்கின்றார்.இந்த தகவல் அங்கிருந்தவர்களை முகம் சுழிக்க வைத்துள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.


Advertisement

Advertisement

Advertisement