தமிழ் சினிமாவில் என்னை அறிந்தால் படத்தின் மூலம் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானவர்தான் அனிகா சுரேந்திரன். அதன் பின்பு மிருதன், நானும் ரவுடிதான், விசுவாசம் போன்ற படங்களில் நடித்தார். தற்போது மாமனிதன் என்ற படத்திலும் நடித்து வருகின்றார்.
இவர் என்னை அறிந்தால் படத்தில் அஜித்துக்கு மகளாக நடித்திருப்பார். அதன் பின்பு விசுவாசம் படத்திலும் அஜித்துக்கு மகளாக நடித்திருப்பார். மேலும் அந்த படத்தில் நயன்தாரா இவருடைய அம்மா கேரக்டரில் நடித்திருப்பார். இதனாலே அவர் குட்டி நயன் என அழைக்கப்படுகிறார்.
சமூக வலைதள பக்கங்களிலும் கவர்ச்சியான தனது அழகின் மூலம் ஒட்டுமொத்த ரசிகர்களையும் தன் பக்கம் கவர்ந்து உள்ளார். மேலும் கூடிய விரைவிலேயே தெலுங்கு சினிமாவிலும் ஹீரோயினாக அறிமுகமாக உள்ளாராம்.
நேற்றைய தினம் தனுஷ் இயக்கத்தில் அனிகா சுரேந்திரன், பவிஷ் நடிப்பில் ரிலீசுக்கு தயார் நிலையில் காணப்படும் நிலவுக்கு என் மேல் என்னடி கோபம் படத்தின் டிரைலர் வெளியிடப்பட்டது. காதல் கதையை மையமாக எடுக்கப்பட்ட இந்த திரைப்படம் ரசிகர்களை வெகுவாக கவருமென எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த நிலையில், நிலவுக்கு என் மேல் என்னடி கோபம் என்ற படத்தின் ப்ரோமோஷன்காக அனிகா சுரேந்திரன் புடவை கட்டி குறித்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டுள்ளார். தற்போது அவர் புடவையோடு வலம் வந்த காட்சிகள் இணையத்தில் வைரலாகி வருவதோடு அவரை குட்டி நயன் என பலரும் கமெண்ட் பண்ணி வருகின்றனர்.
Listen News!