• Jul 27 2024

மகாபாரத சாபக் காட்சியில் மிரட்டிய அமிதாப் பச்சன்? டீசர பார்த்தாலே சும்மா அதிருது.!

Aathira / 3 months ago

Advertisement

Listen News!

உலகநாயகன் கமல்ஹாசன் மற்றும் பிரபாஸ் கூட்டணியில் இணைந்து உருவாகிய படம் தான் கல்கி 2898 ஏடி.  இந்த படத்தில் தீபிகா படுகோன், அமிதாப் பச்சன், திசா பதானி, பசுபதி உள்ளிட்டோர் நடித்து வருகின்றார்கள்.  

இந்திய சினிமாவில் எந்த ஒரு படத்திற்கும் செலவு செய்யாத வகையில் சுமார் 500 கோடி பட்ஜெட்டில் இந்த படத்தை இயக்குனர் உருவாக்கி வருகின்ற நிலையில், இந்த படம் பாகுபலி படத்தை விட பிரம்மாண்ட வசூலில் வேட்டை ஆடும் எனவும் கூறப்படுகிறது.

கல்கி படத்தில் பைரவா என்ற கேரக்டரில் பிரபாஸ் நடித்து வரும் நிலையில், கல்கி படத்தில் அமிதா பச்சனின் கதாபாத்திரம் குறித்த அறிவிப்பு வெளியாகி உள்ளது.


அதாவது மகாபாராதத்தில் பாண்டவர்கள் மற்றும் கௌரவர்களுக்கு குருவாக இருந்தத துரோணாச்சாரியாரின் மகன் அஸ்வத்தாமா அனுமான் போலவே இந்த பூமியில் உயிருடன் உலாவி வருவதாக புராணக் கதைகள் உள்ளன. அதை மையப்படுத்தியே தற்போது அஸ்வத்தாமா கேரக்டரில் அமிதாப் பச்சன் நடித்துள்ளார்.


தற்போது வெளியான டீசரில் துரோணாச்சாரியாரின் மகன் அஸ்வத்தாமா என தன்னை அமிதாப் பச்சன் அறிமுகம் செய்யும்போது  மகாபாரதத்தில் அவருக்கு கொடுக்கப்பட்ட சாபக் காட்சியையும் காட்டி மிரட்டி உள்ளனர்.

அதன்படி பிரபாஸ் பைரவா கேரக்டரிலும், அமிதாப் பச்சன் அஸ்வத்தாமா கேரக்டரிலும் நடித்துள்ள நிலையில், கமல்ஹாசன் கல்கி கேரக்டரில் நடித்துள்ளாரா என்ற கேள்வி தற்போது ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.


Advertisement

Advertisement