• May 02 2024

ஆடை பட சர்ச்சைக்குப் பிறகு மீண்டும் தமிழில் ரீ என்ட்ரி கொடுக்கும் அமலாபால்-அதுவும் யாருடைய படத்தில் தெரியுமா?

stella / 1 year ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் மைனா என்னும் திரைப்படத்தின் மூலம் அறிமுகமானவர் தான் நடிகை அமலாபால். இப்படத்தில் கிடைத்த வரவேற்பைத் தொடர்ந்து விஜய், தனுஷ், ஜெயம் ரவி என மாஸ் ஹீரோக்களுடன் ஜோடி சேர்ந்து நடித்தார்.

இவருடைய நடிப்பில் கடைசியாக தமிழில் 2019ஆம் ஆண்டு ஆடை என்ற படம் வெளியானது. இப்படத்தில் இவர் நிர்வாணமாக நடித்ததால் பல சர்ச்சைகளில் சிக்கினார். இதனால் தமிழில் படவாய்ப்புகள் கிடைக்காமல் போனது. இதனால் மற்ற மொழி படங்கள் மற்றும் வெப்சீரியல்களில் நடித்து வருகின்றார்.

மேலும் சமூக வலைத்தளங்களில் மிகவும் ஆக்டிவாக இருக்கும் அமலாபால் அவ்வப்போது தன்னுடைய கவர்ச்சியான புகைப்படத்தை வெளியிட்டு ரசிகர்களை குஷிப்படுத்தி வருவார். இந்நிலையில் தமிழில் மீண்டும் அமலா பால் ரீ என்ட்ரி கொடுக்க உள்ளார் என்ற செய்தி வெளியாகி உள்ளது.

அதாவது ஹாலிதா ஷமீம் இயக்கத்தில் உருவாக உள்ள மின்மினி படத்தில் அமலாபால் கேமியோ தோற்றத்தில் நடிக்கவுள்ளார். மேலும் இப்படத்தில் விஷ்ணு விஷாலும் கேமியோ தோற்றத்தில் நடிக்கிறார் என்ற செய்தி வெளியாகியுள்ளது.

ஏற்கனவே அமலா பால் மற்றும் விஷ்ணு விஷால் இருவரும் இணைந்து ராட்சசன் என்ற த்ரில்லர் படத்தில் நடித்திருந்தனர். இப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றிருந்தது. மேலும் ஹாலிதா ஷமீம் இயக்கும் இப்படமும் ரசிகர்களை கவரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த படத்தில் சிறப்பு தோற்றத்தின் மூலம் அமலாபாலுக்கு அடுத்தடுத்த தமிழ் பட வாய்ப்புகள் வரவும் அதிக வாய்ப்பு உள்ளது. என்று சினிமா வட்டாரங்களில் பேசப்பட்டு வருகின்றது.

Advertisement

Advertisement

Advertisement