• Apr 28 2024

சம்பளத்தை டபுள் மடங்கு உயர்த்திய அல்லு அர்ஜுன்...அதுக்குன்னு இப்படியா என ஷாக்கான ரசிகர்கள்..!

Aishu / 1 year ago

Advertisement

Listen News!

தெலுங்கு திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வருபவர் அல்லு அர்ஜுன்.மேலும்  அவர் நடிப்பில் கடைசியாக ரிலீஸ் ஆன படம் புஷ்பா. கடந்த 2021-ம் ஆண்டு ரிலீஸ் ஆன அப்படத்தை சுகுமார் இயக்கி இருந்தார். இப்படத்தில் அல்லு அர்ஜுனுக்கு ஜோடியாக ராஷ்மிகா மந்தனா நடித்திருந்தார். அத்தோடு இதுதவிர இப்படத்திற்காக நடிகை சமந்தா ஆடிய ஐட்டம் டான்ஸ் வேறலெவலில் ஹிட் ஆனதோடு, இன்றளவும் பட்டிதொட்டியெங்கும் பட்டைய கிளப்பி வருகின்றது.

புஷ்பா திரைப்படம் பாக்ஸ் ஆபிஸிலும் அதிரிபுதிரியான வெற்றியை ருசித்தது. அத்தோடு மைத்ரி மூவிஸ் நிறுவனம் தயாரித்த இப்படத்தின் முதல் பாகம் பாக்ஸ் ஆபிஸில் ரூ.350 கோடிக்கு மேல் வசூலித்து மாஸ் காட்டியது. அத்தோடு புஷ்பா படத்தின் பிரம்மாண்ட வெற்றியை தொடர்ந்து தற்போது அப்படத்தின் இரண்டாம் பாகம் தயாராகி வருகின்றது. முதல் பாகத்தைவிட பிரம்மாண்டமாக இப்படத்தை எடுத்து வருகின்றனர்.


புஷ்பா படத்தின் நாயகன் அல்லு அர்ஜுனின் பிறந்தநாளை முன்னிட்டு அண்மையில் புஷ்பா 2 படத்தின் மெர்சலான கிளிம்ப்ஸ் வீடியோவை படக்குழு வெளியிட்டு உள்ளது. அத்தோடு  அல்லு அர்ஜுனின் சிறப்பு தோற்றம் அடங்கிய போஸ்டரும் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. இதனால் புஷ்பா 2 படம் மீதான எதிர்பார்ப்பு மேலும் அதிகரித்து உள்ளது. 

இவ்வாறுஇருக்கையில்  புஷ்பா 2 படத்திற்காக நடிகர் அல்லு அர்ஜுன் வாங்கியுள்ள சம்பள விவரம் வெளியாகி உள்ளது. புஷ்பா படத்தில் நடிப்பதற்காக ரூ.45 கோடி சம்பளமாக வாங்கிய அவர், அப்படத்தின் அதிரி புதிரியான வெற்றியை தொடர்ந்து அதன் இரண்டாம் பாகத்தில் நடிக்க சம்பளத்தை டபுள் மடங்காக உயர்த்தி விட்டாராம். அதன்படி புஷ்பா 2-விற்காக அவர் ரூ.85 கோடி சம்பளமாக வாங்கி உள்ளதாக கூறப்படுகிறது.


புஷ்பா படத்திற்கு பின் அல்லு அர்ஜுன் பான் இந்தியா ஸ்டாராக உயர்ந்துவிட்டதால் அவரின் மார்க்கெட்டும் இந்தியா முழுவதும் விரிவடைந்துள்ளது. எனினும் இதன் காரணமாகவே அவர் சம்பளத்தை அதிரடியாக உயர்த்திவிட்டதாக சொல்லப்படுகின்றது. புஷ்பா 2-வும் ஹிட் அடித்தால் அவரின் சம்பளம் ரூ.100 கோடியை தாண்டிவிடும் என டோலிவுட் வட்டாரத்தில் பேச்சு அடிபடுகிறது.


Advertisement

Advertisement

Advertisement