• Apr 23 2026

அஜித்னா சும்மாவா? - செல்பி எடுக்க வந்த ரசிகர்களைத் தவிர்த்த அஜித்... வைரலான வீடியோ!

shali / 3 weeks ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவரான அஜித் குமார், தனது நடிப்புக்கு அப்பாற்பட்ட ஆர்வமான கார் ரேஸிங்கிலும் சிறந்து விளங்குகிறார். ‘Ajith Kumar Racing’ அணியின் மூலம் துபாய், பெல்ஜியம் உள்ளிட்ட பல நாடுகளில் நடைபெற்ற போட்டிகளில் பங்கேற்று பல்வேறு சாதனைகளையும் பெற்றுள்ளார்.


இந்நிலையில், சமீபத்தில் இத்தாலியில் நடைபெற்ற கார் ரேஸில் கலந்து கொண்டு சென்னை திரும்பிய அஜித் குமார், விமான நிலையத்தில் ரசிகர்களை சந்தித்தார். அப்போது, அவரை பார்த்த ரசிகர்கள் உற்சாகமாக செல்பி எடுக்க முனைந்தனர். ஆனால், அஜித் குமார் மிகவும் நாகரீகமாகவும் அமைதியாகவும் அதை தவிர்த்த விதம் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

அவரது நடத்தை குறித்து ரசிகர்கள் பலரும் பாராட்டுக்களை தெரிவித்து வருகின்றனர். எந்த சூழலிலும் அமைதியுடன் நடந்து கொள்வது, ரசிகர்களை மதிக்கும் விதம் ஆகியவை அஜித்தின் தனித்துவமான குணமாகவே பார்க்கப்படுகிறது. 

சினிமாவையும், ரேஸிங் உலகையும் சமநிலையில் வைத்து செயல்படும் அஜித் குமார், தனது ஒழுக்கம் மற்றும் எளிமையான அணுகுமுறையால் ரசிகர்களின் மனதில் என்றும் இடம்பிடித்து வருகிறார். 

Advertisement

Advertisement