• Sep 08 2024

2 நடிகைகளுடன் வெளிநாட்டுக்கு ரகசியமாக செல்லும் அஜித்.. 40 நாட்கள் என்ன செய்ய போகிறார்கள்?

Sivalingam / 3 months ago

Advertisement

Listen News!

நடிகர் அஜித் இரண்டு பிரபல நடிகைகளுடன் வெளிநாட்டுக்கு செல்ல இருப்பதாகவும் அவர்கள் 40 நாட்கள் அந்நாட்டில் தங்க இருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளன.

அஜித் தற்போது ஒரே நேரத்தில் ’விடாமுயற்சி’ மற்றும் ’குட் பேட் அக்லி’ ஆகிய இரண்டு படங்களில் நடித்து வரும் நிலையில் ’குட் பேட் அக்லி’ படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு நாளை மறுநாள் முடிவடைய உள்ளது.

இதனை அடுத்து அஜித் ’விடாமுயற்சி’ படத்தின் படப்பிடிப்பிற்காக அஜர்பைஜான் நாட்டிற்கு செல்ல இருப்பதாகவும் ஜூன் 20 ஆம் தேதி முதல் அஜர்பைஜான் நாட்டில் ’விடாமுயற்சி’ படத்தின் படப்பிடிப்பு தொடங்க ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருவதாகவும் கூறப்படுகிறது.



அஜித்துடன் முதலில் இயக்குனர் மகிழ் திருமேனி உட்பட  படக்குழுவினர் செல்ல இருப்பதாகவும் அதன் பின்னர் த்ரிஷா மற்றும் ரெஜினா ஆகிய இருவரும் அஜர்பைஜான் செல்ல  இருப்பதாகவும் அஜித், த்ரிஷா மற்றும் ரெஜினா ஆகியவர்களின் முக்கிய காட்சிகள் படமாக்க திட்டமிட்டு இருப்பதாகவும் கூறப்படுகிறது.

மேலும் இந்த மூவரும் நடிக்கும் காட்சி மிகவும் முக்கியமானது என்பதால் ரகசியமாக படமாக்க திட்டமிட்டுள்ளதாகவும் பட குழுவினர்களில் சிலர் மட்டுமே இந்த காட்சியின் படப்பிடிப்பின் போது இருப்பார்கள் என்றும் கூறப்படுகிறது.

இந்த நிலையில் ’விடாமுயற்சி’ படத்தின் 40 நாள் படப்பிடிப்பு முடிந்த பின்னர் ’குட் பேட் அக்லி’ படத்தின் அடுத்த படப்பிடிப்புக்கு அஜித் செல்ல இருப்பதாகவும் இந்த படத்தின் முக்கிய காட்சிகள் ஜப்பானில் படமாக்க இருப்பதை எடுத்து ஆதிக் ரவிச்சந்திரன் முன்கூட்டியே ஜப்பான் சென்று படப்பிடிப்புக்கான ஏற்பாடுகளை செய்ய இருப்பதாகவும் கூறப்படுகிறது.

Advertisement

Advertisement