அஜித்தின் 62-ஆவது படம் குறித்த அப்டேட்டிற்காக காத்திருந்த ரசிகர்களுக்கு சமீபத்தில் அஜித்தின் தந்தை மரணமடைந்த செய்தி அதிர்ச்சியாக வந்தது. அதாவது இவரின் தந்தையான பி.சுப்பிரமணியம் உடல்நலக்குறைவினால் உயிரிழந்தார்.
இதற்கு அரசியல் வாதிகள், திரைப்பிரபலங்கள் எனப் பலரும் நேரில் சென்றும், தொலைபேசி மூலமாகவும், சமூக வலைத்தளங்களின் மூலமாகவும் இரங்கல் தெரிவித்து இருந்தனர். அந்தவகையில் எடப்பாடி பழனிச்சாமி அவர்களும் தொலைபேசி மூலமாக தனது இரங்கலை அஜித் குமாரிற்குத் தெரிவித்து இருந்தனர்.
இந்நிலையில் தந்தையை இழந்த சோகத்தில் இருக்கின்ற அஜித்குமாரும் அதிமுக பொதுச் செயலாளராக பொறுப்பேற்றுள்ள எடப்பாடி பழனிச்சாமி அவர்களுக்கு தனது வாழ்த்துக்களினைத் தெரிவித்து இருக்கின்றார். தான் எந்தளவு கவலையில் இருந்தாலும் மற்றவர்களின் செயலைப் பாராட்டி வரும் அஜித்தின் இந்த நல்ல குணத்தைப் பலரும் புகழ்ந்து வருகின்றனர்.
Listen News!