தமிழ் சினிமாவில் பிரபலமான இயக்குநர்களில் ஒருவரான விக்னேஷ் சிவன் கடந்தாண்டு தனது காதலியான நடிகை நயன்தாராவை கரம்பிடித்தார். அதனைத் தொடர்ந்து 2குழந்தைகளுக்கு தந்தையான நிலையில் தொடர்ந்து சினிமாவில் பிசியாக இருந்து வருகின்றார்.
அந்தவகையில் 'AK 62' படத்தை விக்னேஷ் சிவன் இயக்க இருந்த நிலையில், அவர் சொன்ன கதை திருப்தி அளிக்காததால் அவரை நீக்கிஇருந்தனர். இதனால் கடும் அப்செட்டில் இருந்த அவர் தற்போது அதிலிருந்து மீண்டு வந்து தனது அடுத்த படத்திற்கான பணிகளை மேற்கொண்டு வருகிறார்.
மேலும் இவர் அடுத்ததாக லவ் டுடே படத்தில் நாயகனாக நடித்த பிரதீப் ரங்கநாதனை வைத்து ஒரு படத்தை இயக்க உள்ளார். இதற்கான ஆரம்பக்கட்ட பணிகள் ஆரம்பமாகி விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன.
இந்நிலையில் தற்போது விக்னேஷ் சிவன் ஒரு அதிர்ச்சி முடிவு எடுத்திருப்பதாக தகவல் வெளியாகி இருக்கின்றது. அதாவது இவர் திடீரென சின்னத்திரை பக்கம் சென்றுள்ளாராம். அந்தவகையில் காஃபி வித் டிடி என்ற நிகழ்ச்சியைப் போல ஜீ தமிழ் தொலைக்காட்சியில் பிரபலங்களை பேட்டி எடுக்கும் நிகழ்ச்சி ஒன்று விரைவில் ஆரம்பமாக உள்ளதாம். இந்த நிகழ்ச்சியைத்தான் விக்னேஷ் சிவன் தான் தொகுத்து வழங்க உள்ளதாகக் கூறப்படுகின்றது.
எனவே கமல்ஹாசன் பிக்பாஸ் நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்கி வரும் நிலையில் தற்போது விக்னேஷ் சிவனும் வேறொரு நிகழ்ச்சியை தொகுத்து வழங்கவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Listen News!