• Sep 21 2024

ரோசாப்பூ.. சின்ன ரோசாப்பூ.. டாப்சியின் லேட்டஸ்ட் போட்டோஷூட்..!

Sivalingam / 1 month ago

Advertisement

Listen News!

நடிகை டாப்ஸி திருமணத்திற்கு பின்னரும் விதவிதமான கிளாமரான போட்டோஷூட் புகைப்படங்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவு செய்து வரும் நிலையில் சற்றுமுன் அவர் கையில் ரோசாப்பூ வைத்திருக்கும் புகைப்படங்களை பதிவு செய்துள்ள நிலையில் இந்த புகைப்படங்களுக்கு ஏராளமான கமெண்ட் குவிந்து வருகிறது.

வெற்றிமாறன் இயக்கத்தில் உருவான ’ஆடுகளம்’ என்ற திரைப்படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமானவர் டாப்ஸி. அதன் பின்னர் அவர் ’வந்தான் வென்றான்’ ’வை ராஜா வை’ ’ஆரம்பம்’ உள்ளிட்ட சில தமிழ் படங்களில் நடித்த நிலையில் இந்தியில் தான் அவர் பிசி ஆனார் என்பதும் தற்போது  பாலிவுட்டில் முன்னணி நடிகைகளில் ஒருவராக உள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் கடந்த மார்ச் மாதம் பேட்மிண்டன் வீரர்  மதியாஸ் போ என்பவரை திருமணம் செய்து கொண்டார் என்பதும் அதற்கு முன் அவர் 11 ஆண்டுகள் அவருடன் டேட்டிங்கில் இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் திருமணத்திற்கு பின்னரும் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கிளாமரான புகைப்படங்களை பதிவு செய்து ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்து வரும் நிலையில் சற்றுமுன் அவர் ரோஜாப்பூவை கையில் வைத்திருக்கும் போட்டோஷூட் புகைப்படங்களை பதிவு செய்துள்ளார். இந்த புகைப்படங்களும் கிளாமராக இருப்பதை எடுத்து ரசிகர்கள் கமெண்ட்ஸ்களை குவித்து வருகின்றனர்.

ஒரு ரோஸ் இன்னொரு ரோஸை கையில் வைத்திருக்கிறது என்றும், நீங்களே ஒரு ரோஸ் உங்கள் கையில் எதற்காக இன்னொரு ரோஸ் என்றும் கவிதை வடிவில் பல கமெண்ட்ஸ் பதிவாகி வருகிறது. இந்த போட்டோஷூட் புகைப்படங்களை டாப்ஸி பதிவு செய்து ஒரு மணி நேரமே ஆகியுள்ள நிலையில் ஆயிரக்கணக்கான லைக் குவிந்து உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.


Advertisement

Advertisement