• May 08 2024

வளர்ப்பு மகளால் சரமாரியாக தாக்கப்பட்ட நடிகை ஷகிலா! சற்றுமுன் அதிர்ச்சித் தகவல்

Aathira / 3 months ago

Advertisement

Listen News!

மலையாளத்தில் கவர்ச்சி கதாபாத்திரங்களில் நடித்து பிரபலமானவர் தான் நடிகை ஷகிலா. இவர் தமிழ் படங்களில் சில குணசித்ர கதாபாத்திரத்திக் நடித்திருந்தார்.

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான குக் வித் கோமாளி என்ற நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். ஷகிலாவை கவர்ச்சி நடிகையாக பார்த்து வந்த சிலர் இந்த நிகழ்ச்சிக்கு பின் ஷகிலா அம்மா என்று பல பேர் அழைத்தனர். இதை அவரை பல பேட்டியில் கூறியுள்ளார்

இந்த நிலையில், நடிகை ஷகிலா மீது தாக்குதல் ஒன்று நடைபெற்றுள்ளது என அதிர்ச்சியளிக்கும் தகவல் வெளியாகியுள்ளது. இந்த தகவல் பெரும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.


அதன்படி, நடிகை ஷகிலா தனது அண்ணன் மகளான ஷீத்தல் என்பவரை 6 மாத குழந்தையாக இருக்கும் போதிலிருந்து வளர்த்து வருகிறார்.

தற்போது, அவரது வளர்ப்பு மகள் ஷீத்தல் என்பவரே ஷகிலாவை சரமாரியாக  தாக்கிவிட்டார் என ஷாக்கிங் தகவல் வெளியாகியுள்ளது.


ஷகிலாவிற்கும், அவரது வளர்ப்பு மகள் ஷீத்தல் குடும்பத்திற்கும் இடையே மோதல் ஏற்பட்டதாகவும், இதில் ஷீத்தல் தாய் சசி, அவரது சகோதரி ஜமீலா உள்ளிட்டோர் இணைந்து ஷகிலாவை தாக்கியுள்ளனர் என கூறப்படுகிறது.

இச் சம்பவம் தொடர்பில் போலீசில் புகார் அளிக்கப்பட்டதாகவும்,  இதற்கான விசாரணை தற்போது நடைபெற்று வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

Advertisement

Advertisement

Advertisement