• Apr 26 2024

மீண்டும் புத்தம் புது சீரியலில் நடிக்கவுள்ள நடிகை ரோஷினி ஹரிப்பிரியன்- இந்த முறை விஜய் டிவி இல்லையாம்

stella / 1 year ago

Advertisement

Listen News!


விஜய் டிவியில் சூப்பர் ஹிட்டாக ஓடிக் கொண்டிருக்கும் சீரியல் தான் தான் பாரதி கண்ணம்மா. இந்த சீரியல் ஆரம்பித்த காலத்தில் கண்ணம்மா என்னும் கதாப்பாத்திரத்தில் நடித்து வந்தவர் ரோஷினி ஹரிப்பிரியன்.இவர் இந்த சீரியலில் நடித்ததன் மூலம் தமக்கென ஓர் ரசிகர் பட்டாளத்தை சேர்த்துக் கொண்டார்.

இருப்பினும் பாரதி கண்ணம்டா சீரியலில் இருந்து திடீரென விலகினார். இது ரசிகர்களுக்கு பேரதிர்ச்சியைக் கொடுத்தது.அதற்கு பல காரணங்கள் சொல்லப்பட்டது. ஆனால் இன்று வரை அவரின் விலகலுக்கு உண்மையான கராணம் என்ன ? என்பது யாருக்கும் தெரியாது. ஆனால் சீரியலில் இருந்து விலகியதற்கு தனது ரசிகர்களிடம் ரோஷினி மன்னிப்பு கோரி இருந்தார்.

பின்பு இதனைத் தொடர்ந்து குக்வித் கோமாளி சீசன் 3 நிகழ்ச்சியில் போட்டியாளராகப் பங்குபற்றி ரசிகர்களைக் கவர்ந்திருந்தார். அத்தோடு சமூக வலைத்தளங்களில் ஆக்டீவாக இருக்கும் ரோஷினி தனது லேட்டஸ்டான புகைப்படங்களைப் பதிவிட்டு வருவார்.


ரோஷினி சின்னத்திரையில் இருந்து வெள்ளித்திரைக்கு செல்வார் அவரை கூடிய விரைவில் படங்களில் பார்க்கலாம் எனறு ரசிகர்கள் ஆவலுடன் காத்திருந்தனர். ஆனால் தற்போது வரை அதுப்பற்றி எந்த தகவலும் வெளியாகவில்லை.இந்நிலையில் தற்போது ரோஷினி குறித்த சுடச்சுட தகவல் ஒன்று இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது. 

அதாவது மீண்டும் சின்னத்திரையில் ரோஷினி என்ட்ரி கொடுக்க இருக்கிறார் என கூறப்படுகிறது. ஷு தமிழில் கூடிய விரைவில் தொடங்கவுள்ள சீரியலில் ரோஷினி ஹரிப்ரியன் லீட் ரோலில் நடிக்கிறார் என்ற தகவல் இணையத்தில் காட்டுத்தீ போல் பரவி வருகிறது. அதே நேரம் இந்த தகவலை ரோஷினி  தரப்பு உறுதி செய்யவில்லை.


Advertisement

Advertisement

Advertisement