• May 19 2024

இறக்கும் முன் கூட கேப்டன் செய்த செயல்... சமாதியில் கதறி அழுத நடிகை ராதா...

subiththira / 4 months ago

Advertisement

Listen News!

தேமுதிக கட்சியின் தலைவருமாகிய விஜயகாந்த் கடந்த சில தினங்களுக்கு முன்பு உடல்நலக் குறைவு காரணமாக சென்னையில் இறப்புக்குள்ளானார். இவரது உடல் தேமுதிக அலுவலகத்தில் அடக்கம் செய்யப்பட்டது. இவருடைய சமாதிக்கு திரையுலகைச் சேர்ந்த பிரபலங்கள் பலரும் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

அந்த வகையில் முன்னணி பிரபலங்கள் விஜயகாந்த் சமாதியில் அஞ்சலி செலுத்திவிட்டு விஜயகாந்த் குறித்த தங்களது அனுபவங்கள் மற்றும் வருத்தங்களை பகிர்ந்துக் கொண்டனர். இந்நிலையில் நடிகர் ராதா அவர்கள் கண்ணீர் மல்க விஜயகாந்த் சமாதி முன்னிலையில் அஞ்சலி செலுத்தினார்.மேலும் ஊடகவியலாளர்களுக்கு இவ்வாறு பேட்டி அளித்தார். நான் அவருடன் சினிமாவில் நடித்ததற்கு பிறகு ஊட்டியில் ஒரு ஷூட்டிங்கில் சந்தித்தது தான் எங்களின் கடைசி சந்திப்பு.


 என் பொண்ணோட கல்யாணத்துக்கு கார்ட் வைக்க அவங்க வீட்டுக்கு போயிருந்தன், அவரை சந்திக்க முடிய இல்ல ஆனா அவருடைய மனைவி இருந்து கதைத்தாங்க என்னோட பொண்ணு கல்யாணத்துக்கும் வந்தாங்க. அவரை பார்க்கணும்னு நினச்சேன் ஆனா இப்படி பார்ப்பேன் என்று நினைக்க வில்லை என்று கண்ணீர் மெல்ல பேட்டி அளித்தார்   நடிகை ராதா.    

Advertisement

Advertisement