• Apr 26 2024

போலீஸிடம் சிக்காமல் தலைமறைவாய் இருக்கும் நடிகை மீரா மிதுன்.. நீதிமன்றம் விடுத்த அதிரடி உத்தரவு..!

Aishu / 1 year ago

Advertisement

Listen News!

மாடலிங் மூலம் தமிழ்த் திரையுலகில் அடியெடுத்து வைத்த மீரா மிதுன், ஸ்ரீ கணேஷ் இயக்கிய '8 தோட்டாக்கள்' திரைப்படம் மூலம் கதாநாயகியாக அறிமுகமானார். அதனைத் தொடர்ந்து விக்னேஷ் சிவன் இயக்கத்தில் சூர்யாவின் 'தானா சேர்ந்தக் கூட்டம்' படத்திலும் மீரா மிதுன் நடித்துள்ளார். விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான 'பிக் பாஸ்' நிகழ்ச்சி மூலம் ரொம்பவே பிரபலமான அவர், அதே வேகத்தில் தேவையில்லாமல் பேசி பல சர்ச்சைகளிலும் சிக்கி தவித்தார்.

நடிப்பில் மட்டும் கவனம் செலுத்தாமல் தேவையில்லாமல் வாயைக் கொடுத்து வாங்கி கட்டிக் கொண்டார் மீரா மிதுன். திரையுலகில் பட்டியலின, பழங்குடியினத்தைச் சேர்ந்தவர்கள் பெற்றுள்ள முன்னேற்றம் குறித்து, சமூக வலைதளங்களில் கருத்து தெரிவித்து வீடியோ வெளியிட்டார் மீரா மிதுன். இதனால் அவர் மீதும், அதற்கு உடந்தையாக இருந்த அவரது நண்பர் சாம் அபிஷேக் மீதும், விடுதலை சிறுத்தைகள் கட்சியின் சார்பில் சென்னை காவல் ஆணையரிடம் புகார் கொடுக்கப்பட்டது.



எனினும் இதனையடுத்து, அந்த புகாரின் பேரில் சென்னை மத்திய குற்றப் பிரிவு காவல்துறை, கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் வழக்கு பதிவு செய்து இருவரையும் கைது செய்தது. பின்னர் இருவரும் நீதிமன்றத்தில் ஜாமீன் பெற்றனர்.

 இந்த வழக்கில் இருவர் மீதும் சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்கு சென்னை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில், ஆகஸ்ட் 6ம் தேதி விசாரணைக்கு வந்தபோது, ஷாம் அபிஷேக் மட்டுமே முன்னிலையானார். அத்தோடு முக்கிய குற்றவாளியான மீரா மீதுன் முன்னிலையாகவில்லை. எனவே அவருக்கெதிராக ஜாமீனில் வெளிவர முடியாதபடி கைது வாரண்ட் பிறப்பித்தது நீதிமன்றம்.


இவ்வாறுஇருக்கையில், இந்த வழக்கு 3வது கூடுதல் அமர்வு நீதிமன்ற நீதிபதி ஸ்ரீதேவி முன்பு ஆகஸ்ட் 6ம் தேதி விசாரணைக்கு வந்தது. அப்போதும் மீரா மிதுனின் நண்பர் ஷாம் அபிஷேக் மட்டுமே ஆஜரானர். காவல்துறை சார்பில் ஆஜரான அரசு சிறப்பு வழக்கறிஞர் சுதாகர், பிடிவாரண்ட் பிறப்பிக்கப்பட்டுள்ள மீரா மீதுன் தலைமறைவாக உள்ளதாகவும், விரைவில் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படுவர் என தெரிவித்தார். இந்நிலையில் இந்த வழக்கு முதன்மை அமர்வு நீதிமன்ற நீதிபதி அல்லி முன் இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது,

அப்போது காவல் துறை தரப்பில், ஆஜரான வழக்கறிஞர் எம்.சுதாகர். பிடி வாரண்ட் பிறப்பிக்கபட்ட மீரா மீதுன் பல இடங்களில் போலீசார் தேடி வருவதாகவும், அவர் இருப்பிடத்தை அடிக்கடி மாற்றி தலைமறைவாக இருந்து வருவதாகவும் தெரிவித்தார். 


அத்தோடு பெங்களூருவில் தலைமறைவாக இருப்பதாக வந்த தகவலின் படி அங்கு சென்று பார்த்த போது அவர் அங்கிருந்து வேறு இடத்திற்கு சென்றுவிட்டார். செல்போன் எண்ணையும் அடிக்கடி மாற்றி வருகிறார். போலீஸார் விரைவில் அவரை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துவார்கள் எனத் தெரிவித்தார். அப்போது நீதிபதி, கடந்த 2 மாதத்திற்கு மேல் வாரண்ட் நிலுவையில் இருப்பதாகவும் கைது செய்ய உரிய நடவடிக்கை காவல்துறை எடுக்கவில்லையென அதிருப்தி தெரிவித்தார். மேலும், இந்த வழக்கு விசாரணையை அக்டோபர் 19ம் தேதிக்கு தள்ளி வைத்து உத்தரவிட்டார்.

Advertisement

Advertisement

Advertisement