• May 19 2024

பிக் பாஸ் வீட்டில் கண்ணீர் விட்டு அழுத நடிகை ஆயிஷா.. அந்த ஆண் போட்டியாளர் தான் காரணமா..?

Aishu / 1 year ago

Advertisement

Listen News!

பிக் பாஸ் ரசிகர்கள் ஆவலுடன் காத்து கொண்டு இருந்த பிக் பாஸ் சீசன் 6 நிகழ்ச்சி கடந்த அக்டோபர் 9ஆம் தேதி பிரமாண்டமாக ஆரம்பிக்கப்பட்டது.இந்த நிகழ்ச்சியை கமலே தொகுத்து வழங்க உள்ளார்.

இதில் போட்டியாளராக ஜி.பி.முத்து, பாடகர் அசல் கோலார், ராபர்ட் மாஸ்டர், திருநங்கை ஷிவின் கணேசன் , மெட்லி ஒலி சாந்தி, சீரியல் நடிகர் அஸீம், நடிகை ஆயிஷா, ஷெரின் ஷாம், ஐஸ்வர்யாவின் அண்ணன் மணிகண்ட ராஜேஷ், நடிகை ரச்சிதா மகாலட்சுமி, ராம் ராமசாமி, பாடகர் தினேஷ் கனகரத்தினம் , விஜே மகேஸ்வரி, அமுதவாணன், மணிச்சந்திரா, விஜே கதிரவன், நடிகை குயின்ஸி, சிங்கப்பூர் மாடல் நிவாசினி, டிக்டாக் பிரபலம் தனலட்சுமி, விசிக மாநில செய்தி தொடர்பாளர் விக்ரமன் என 20 போட்டியாளர்கள் இருக்கிறார்கள்.



இதில் தொடர்ந்து போட்டியாளர்களுக்கு டாஸ்குகள் கொடுப்பட்டு வருகிறது. மேலும் அந்த வரிசையில் தற்போது புதிய டாஸ்க் ஒன்றை பிக் பாஸ்  அவர்களுக்கு  கொடுத்துள்ளார்.



அது என்ன டாஸ்க் என்றால், இதுவரை இந்த வீட்டில் இருக்கும் நபர்கள் மற்ற ஒரு சில போட்டியாளர்களுடன் பழகிக்கொள்ளாமல் இருக்குறீர்கள்.மேலும்  அப்படி நீங்கள் பழக வேண்டும் என்று நினைக்கும் நபரை தேர்ந்தெடுத்து நீங்கள் ஏன் அவருடன் பழக வேண்டும் என்பதை சொல்லவேண்டும் என்று டாஸ்க் கொடுக்கப்பட்டுள்ளது.



மேலும்  இந்த டாஸ்கில் கலந்துகொண்ட அசல் கோலார், ஆயிஷாவை அழைத்து பேசுகிறார். அப்போது 'சொல்லு டா' என்று ஜாலியாக ஆயிஷா சொன்னார்.



இதை கேட்டவுடன் என்ன 'வாடா போடா' என்று கூப்பிடாதீர்கள் என கூறிவிட்டார். மேலும் இந்த செயல் ஆயிஷாவிற்கு சங்கடத்தை கொடுத்துள்ளது. இதன்பின், 'சரி சொல்லுங்க' என்று ஆயிஷா சொன்னார். என்ன 'வாங்க போங்க' என்றும் கூப்பிடாதீர்கள் என்று அசல் கோலார் கூற மேலும் ஆயிஷாவிற்கு சங்கடம் ஏற்பட்டுள்ளது.



இதனால் டாஸ்க் முடிந்தவுடன் தனியாக சென்று அமர்ந்து கண்ணீர் விட்டு அழுதுள்ளார் ஆயிஷா. இதன்பின் இந்த விஷயத்தை போட்டியாளர்கள் சில ஆயிஷாவிடமும், அசல் கோலார் இடமும் பேசி முடிவுக்கு கொண்டு வந்துள்ளனர். 




Advertisement

Advertisement