• May 19 2024

நடிகர் விஜய் ஆண்டனியின் பிச்சைக்காரப் படக்குழுவினரை அதிரடியாக கைது செய்த போலீஸார்- வெளியாகிய அதிர்ச்சித் தகவல்

stella / 1 year ago

Advertisement

Listen News!

சசி இயக்கத்தில் விஜய் ஆண்டனி நடித்த படம் 'பிச்சைக்காரன்'. கடந்த 2016-ம் ஆண்டு வெளியான இப்படம் பிளாக்பஸ்டர் வெற்றியை பெற்றதோடு, விஜய் ஆண்டனியின் திரையுலக பயணத்தில் திருப்புமுனையை ஏற்படுத்தியது.

இதைத்தொடர்ந்து இப்படத்தின் இரண்டாம் பாகம் உருவாகி வருகிறது. இதில் விஜய் ஆண்டனி நடிப்பதோடு மட்டுமல்லாமல் இயக்கியும் வருகிறார். இப்படத்தின் மூலம் அவர் இயக்குநராகவும் அறிமுகமாகவுள்ளார்.


இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.இந்நிலையில், சென்னை உயர்நீதிமன்றம் மற்றும் பார் கவுன்சில் வளாகத்தை அனுமதி பெறாமல் ட்ரோன் மூலம் படம் பிடித்ததாக கூறி 'பிச்சைக்காரன் -2' படக்குழுவினர் 3 பேரை போலீசார் கைது செய்துள்ளதாக கூறப்படுகிறது.

 பின்னர் கைது செய்யப்பட்ட 3 பேரையும் ஜாமீனில் விடுவித்தாக தகவல் வெளியாகியுள்ளது.படக்குழுவை சேர்ந்த நவீன் குமார், சுபேஸ், சுரேஷ் ஆகியோரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தினார்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது.


Advertisement

Advertisement