தமிழ் சினிமாவில் தனிதத்துவமான கதைகளை இயங்கும் இயக்குநர்களில் முக்கியமானவர் மிஷ்கின். திரைக்கதை மற்றும் கதாபாத்திரங்களுக்கு ஆழமான உணர்வுகளை கொடுக்கும் மிஸ்கின் சமீபத்தில் 'ஓநாயும் ஆட்டுக்குட்டியும்' படத்தின் ஷூட்டிங்கில் நடந்த ஒரு அசத்தலான அனுபவத்தைப் பகிர்ந்துள்ளார்.
அதில் அவர் கூறும்போது "ஒரு காட்சிக்காக அவர் 12 பக்கம் கொண்ட வசனத்தை 5 நிமிடங்களுக்குள் பேசி முடித்ததாக கூறியுள்ளார். இது சினிமா உலகில் அபூர்வமான ஒரு சம்பவமாகும். சாதாரணமாக 5 நிமிடங்களில் 2 பக்கம் வசனம் கூட பேச முடியாது, ஆனால் நான் 12 பக்கவசனங்களை சொல்லியிருந்தேன்" எனத் தெரிவித்துள்ளார்.
மேலும் நீண்ட வசனங்களை ஒரே தடவையில் சொல்லுவது எளிதான காரியமல்ல என்றதுடன் இதனை நான் நேரடியாக அனுபவித்தேன் எனவும் கூறினார். அத்துடன் "நான் அந்தக் காட்சிக்காக முழு மனதுடன் தயாராகி இருந்தேன். 12 பக்கம் வசனம் என்று கூறியதும், நான் அதை முழு உற்சாகத்துடன் சொல்ல ஆரம்பித்தேன். சொல்லி முடிக்கும்போது, உடல் முழுவதும் சக்தி இழந்து, மயக்கம் போட்டு விழுந்துவிட்டேன்!" என்றார். இதனைக் கேட்டு அனைத்து ரசிகர்களும் அதிர்ச்சி அடைந்து கொண்டனர்.
Listen News!