திரைப்பட உலகில் சில நேரங்களில் திரையில் நாம் ரசிக்கும் காட்சிகளுக்குப் பின்னால் நிகழும் சம்பவங்கள், உண்மையான வாழ்க்கையை அதிர்ச்சியடையச் செய்கின்றன. அதே மாதிரி ஒரு சம்பவமே கேரளாவின் மூணாறு பகுதியில் தற்போது நிகழ்ந்துள்ளது.
பிரபல மலையாள நடிகர் ஜோஜு ஜார்ஜ் உள்ளிட்ட ஆறு பேர் காயமடைந்த விபத்து, ‘வரவு’ எனும் புதிய திரைப்படத்தின் படப்பிடிப்பு போதே இடம்பெற்றுள்ளது. இந்த செய்தி, திரைத்துறையினர் மற்றும் ரசிகர்களிடையே பெரும் கவலையையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.
இந்த சம்பவம், மூணாறு அருகே உள்ள ஒரு பள்ளத்தாக்கு பகுதியிலேயே நடந்தது. ‘வரவு’ எனும் மலையாளத் திரைப்படத்தின் ஒரு முக்கிய காட்சிக்காக, படக்குழுவினர் மூணாறு மலைப்பகுதியில் தங்கியிருந்தனர். காட்சிக்கேற்ப, ஒரு வாகனத்தில் நடிகர் ஜோஜு ஜார்ஜ், இயக்குநர் மற்றும் படக்குழுவினர் பயணித்த போது, அந்த வாகனம் வழி தவறி பள்ளத்தில் கவிழ்ந்தது.
இதனால், வாகனத்தில் பயணித்த ஜோஜு ஜார்ஜ் உட்பட 6 பேர் காயமடைந்தனர். விபத்தில் காயமடைந்த அனைவரும் உடனடியாக அருகிலுள்ள மூணாறு அரசு மருத்துவமனை மற்றும் தனியார் மருத்துவமனைகளுக்கு அழைத்துச் செல்லப்பட்டனர்.
Listen News!