• Apr 30 2024

நடிகர் திலீப் யாரையும் பாலியல் பலாத்காரம் செய்யவில்லை- திடுக்கிடும் தகவலைக் கூறிய முன்னாள் பெண் டிஜிபி

stella / 1 year ago

Advertisement

Listen News!

பிரபல நடிகை ஒருவரை கடத்திக் கொண்டு பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட வழக்கில் கடந்த 2017ம் ஆண்டு நடிகர் திலீப் கைது செய்யப்பட்டார். இந்த வழக்கில் திலீப்புக்கு எந்தவொரு சம்மந்தமும் இல்லை என கேரளாவின் முன்னாள் டிஜிபி ஸ்ரீலேகா தனது யூடியூப் பக்கத்தில் வெளியிட்டுள்ள வீடியோ ஒட்டுமொத்த மலையாள திரையுலகையும் அதிர்ச்சியில் ஆழ்த்தி உள்ளது.

இந்த விவகாரத்தில் போலீசார் மீது தான் தவறு உள்ளதாகவும், அவர்கள் செய்யும் தவறை ஏன் தொடர்ந்து மறுத்து மறைத்து வருகின்றனர் என்கிற கேள்வியையும் அவர் எழுப்பி உள்ளார். அத்தோடு இந்த வழக்கில் திலீப்பை வேண்டும் என்றே சிக்க வைத்துள்ளனர் என்றும் கூறியுள்ளார்.

அத்தோடு அவருக்கு எதிராக உருவாக்கப்பட்ட ஆதாரங்கள் அனைத்துமே போலியானைவை என்றும் அவர் கூறியிருந்தார்.இந்த வழக்கில் நடிகர் திலீப்புக்கு எதிராக அவரது முதல் மனைவி நடிகை மஞ்சு வாரியர் தனது வாக்குமூலத்தை கொடுத்திருந்தார்.

மேலும், நடிகர் திலீப்பின் இரண்டாம் மனைவி காவ்யா மாதவன் உள்ளிட்ட சிலரும் இந்த வழக்கில் விசாரிக்கப்பட்டுள்ளனர்.இந்த வழக்கில் திலீப்பின் பின்னால் செல்லாமல் சரியான விசாரணையை நடத்தி இருந்தால் குற்றத்தில் ஈடுபட்ட 5 முதல் 6 பேரை போலீசார் இன்னேரம் பிடித்து நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி இருக்கலாம் என்றும், அதையெல்லாம் விட்டு விட்டு ஏன் அடாவடித்தனம் செய்து வருகின்றனர். காவல் துறை மீது தனக்கு தற்போதும் நம்பிக்கை இருக்கிறது. ஆனால், இந்த விவகாரத்தில் அவர்கள் நடந்து கொள்வது சரியில்லை என்றும் அவர் குற்றம் சாட்டியுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

பிற செய்திகள்

சமூக ஊடகங்களில்:

Advertisement

Advertisement

Advertisement