• Sep 17 2024

மீண்டும் படத்தயாரிப்பாளராக அவதாரம் எடுக்கும் நடிகர் தனுஷ்

Aishu / 2 years ago

Advertisement

Listen News!

கடந்த 2002ஆம் ஆண்டு செல்வராகவன் இயக்கத்தில் வெளியான துள்ளுவதோ இளமை என்ற திரைப்படத்தின் மூலம் அறிமுகமானவர் நடிகர் தனுஷ். இவருடைய முதல் படத்தின் வெற்றியை தொடர்ந்து இவருக்கு படவாய்ப்புகள் அதிகமாக குவிய தொடங்கின. தொடர்ந்து காதல் கொண்டேன், திருடா திருடி, தேவதைகண்டேன் போன்ற பல படங்களில் நடித்தார். தன்னுடைய இயல்பான நடிப்பினால் பல ரசிகர்களை கவர்ந்த இவர் தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக கலக்கி வருகிறார்.

இவர் நடிகராக மட்டுமன்றி திரைப்பட தயாரிப்பாளர், பின்னணிப் பாடகர், பாடலாசிரியர் ,திரைக்கதையாசிரியர், இயக்குநர் என பல்துறை திறமை கொண்டவராக விளங்குகின்றார்.இவர் பாடிய "வை திஸ் கொலவெறி" பாடல் ரசிகர்களை கவர்ந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் நடிகர் தனுஷ் தற்போது படத் தயாரிப்பாளராக மீண்டும் அவதாரம் எடுக்கவுள்ளார். அந்தவகையில் நடிகர் தனுஷ் தனது வுண்டர்பார் படக்கம்பெனியின் மூலம் கடைசியாக 2018ஆம் ஆண்டு மாரி 2 என்ற படத்தை தயாரித்தார். இந்த படம் எதிர்பார்த்த வெற்றியைப் பெறாத நிலையிலும் அதன்பிறகு படங்கள் தயாரிப்பதை நிறுத்தி விட்டார்.

தொடர்ந்து நடிப்பில் மட்டுமே கவனத்தை செலுத்தி வந்த நடிகர் தனுஷ் மீண்டும் படத்தை தயாரிக்க உள்ளார். அந்தவகையில் நான்கு வருடங்கள் கழித்து மீண்டும் தனுஷ் 3 படங்களை அடுத்தடுத்து தயாரிக்க உள்ளதாக கூறப்படுகிறது.

இயக்குநர்கள் வெற்றிமாறன், மாரி செல்வராஜ், மற்றும் எலான் ஆகிய மூன்று இயக்குநர்கள் இயக்கும் படங்களை தயாரிக்க இருப்பதாகவும், இந்த படப்பிடிப்பு விரைவில் தொடங்கும் என்றும் கூறப்படுகிறது .

பிற செய்திகள்

சமூக ஊடகங்களில்:

Advertisement

Advertisement