• May 03 2024

ஆராரிராரோ நான் இங்கு பாட- முதன்முறையாக தன்னுடைய குழந்தைகளின் முகத்தை காட்டி நயன்தாரா எடுத்த லேட்டஸ்ட் கிளிக்ஸ்

stella / 10 months ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் நயன்தாரா, டாப் நடிகையாக இருக்கிறார். லேடி சூப்பர் ஸ்டார் என்ற பட்டம், இவருக்கு வழங்கப்பட்டு இருக்கிறது. ஐயா படத்தில், சரத்குமார் ஜோடியாக தமிழ் சினிமாவில் அறிமுகமானார்.


அதன்பின் பல படங்களில் நடித்து முன்னணி நாயகியாக உயர்ந்தார். சிம்பு, பிரபுதேவா போன்றவர்களுடன் கிசுகிசுக்கப்பட்ட நயன்தாரா, ஒரு கட்டத்தில் டைரக்டர் விக்னேஷ் சிவனை காதலித்து திருமணம் செய்துகொண்டார். வாடகைத்தாய் மூலம் இரட்டை குழந்தை பெற்ற விவகாரத்தில், நயன்-விக்கி ஜோடி சர்ச்சையில் சிக்கி, சமூக வலைதளங்களில் வைரலானது.


பொதுவாக சினிமாவில் பிஸியாக இருக்கும் நடிகைகள், திருமணத்துக்கு பிறகு நடிக்க மாட்டார்கள். நடித்தாலும் ரசிகர்கள் மத்தியில் பழைய வரவேற்பு இருக்காது. படமும் சரியாக ஓடாது. ஆனால் நயன்தாரா விஷயத்தில் இது, நேர்மாறாக இருக்கிறது. திருமணத்துக்கு பிறகும், நயன்தாராவுக்கு இமேஜூம் குறையவில்லை. படங்களில் நடிக்கிற வாய்ப்பும் குறையவில்லை.


இப்போது, ஜெயம் ரவியின் சகோதரர் மோகன் ராஜா இயக்கும் தனிஒருவன் பாகம் 2, மாதவன் நடிக்கும் டெஸ்ட் மற்றும் ராஜ்கமல் பிலிம் இன்டர்நேஷனல் தயாரிக்கும் ஒரு படத்தில் நயன்தாரா நடிக்கிறார். அத்துடன் லைக்கா நிறுவனம் தயாரிக்கும் படத்திலும் நயன்தாரா நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டு இருப்பதாகவும், இந்த படத்தை விக்னேஷ் சிவனே இயக்க உள்ளதாகவும் தகவல் பரவி வருகிறது.


இப்படியான நிலையில் விக்னேஷ் சிவன் மற்றும் நயன்தாரா இருவரும் கடந்த 7ம் தேதி தம்முடைய முதலாவது திருமண நாளைக் கொண்டாடியிருந்தனர்.இவர்களுக்கு பிரபலங்கள் பலரும் வாழ்த்துத் தெரிவித்ததாக விக்னேஷ் சிவன் நேற்றைய தினம் அறிவித்திருந்தார்.இப்படியான நிலையில் நயன்தாரா தன்னுடைய இரண்டு பிள்ளைகளையும் துாக்கி வைத்திருந்து எடுத்த புகைப்படங்களை விக்னேஷ் சிவன் பதிவிட்டுள்ளார்.இந்தப் புகைப்படங்கள் ரசிகர்களிடையே வைரலாகி வருவதையும் காணலாம்.

Advertisement

Advertisement

Advertisement