இந்திய சினிமாவில் 'கிரிஷ்' படத்தின் எதிர்பார்ப்பு மீண்டும் மக்கள் மத்தியில் அதிகரிக்கத் தொடங்கியுள்ளது. பிரபல பாலிவுட் நடிகர் ஹிருத்திக் ரோஷன் நடிப்பில் வெளியான 'கிரிஷ்' திரைப்படம், அவரை இந்தியாவின் சூப்பர் ஹீரோவாக புதிய உயரத்திற்கு எடுத்துச் சென்றது.
அதன் வெற்றியை தொடர்ந்து 'கிரிஷ் 2' மற்றும் 'கிரிஷ் 3' படங்களும் ரசிகர்களிடம் மிகப்பெரிய வரவேற்பைப் பெற்றன. குறிப்பாக, 'கிரிஷ் 3' கடந்த 2013ம் ஆண்டு வெளியானதுடன் வசூல் ரீதியாகவும் விமர்சன ரீதியாகவும் பெரும் வெற்றியைக் கண்டது.

இப்போது, 10 வருடங்களுக்கு பிறகு, 'கிரிஷ் 4' குறித்து ரசிகர்களிடம் பெரும் எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. இந்த எதிர்பார்ப்பை இன்னும் அதிகரிக்கச் செய்த ஒரு செய்தி தற்போது அதிகாரப்பூர்வமாக வெளியாகியுள்ளது. 'கிரிஷ் 4' படத்தை ஹிருத்திக் ரோஷன் தான் இயக்கப் போகின்றார். தற்பொழுது ஹிருத்திக் ரோஷன் தன் வாழ்க்கையில் முதல் முறையாக நடித்து இயக்கும் பெரும் முயற்சியாக 'கிரிஷ் 4' திட்டமிடப்பட்டிருக்கின்றது.
சமீபத்திய பேட்டியில் "கிரிஷ் 4 என்பது என் கனவுகளின் விரிவாக இருக்கும். நான் ரசிகர்களுக்கு முழு இதயத்தையும், திறமையையும் கொடுக்க ஆசைப்படுகின்றேன்." என்று கூறியுள்ளார். மேலும் இப்படத்தில் கோய் மில்காயா , கிரிஷ் போன்ற படங்களில் ஹிருத்திக் ரோஷனுடன் இணைந்து நடித்த பிரீத்தி ஜிந்தா, மீண்டும் 'கிரிஷ் 4' படத்தில் இணைவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
Listen News!