• May 04 2024

சிவாஜி குடும்ப சொத்து வழக்கில் ஏற்பட்ட திடீர் திருப்பம்- கடுப்பான பிரபுவின் சகோதரிகள்

stella / 1 year ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் மூன்று தலைமுறையினராக நிலைத்து நிற்கும் குடும்பம் தான் நடிகர் பழம் பெரும் நடிகர் சிவாஜியின் குடும்பம். சினிமாவில் நடிகர் திலகம் என்ற பட்டத்தோடு தனக்கென தனி அடையாளத்தை ஏற்படுத்திக் கொண்டவர்.மறைந்தாலும் மறக்கப்படாத கலைஞனாக வாழ்கின்றார்.

இவரது மகன்களான பிரபு மற்றும் ராம் குமார் ஆகியோரும் திரைப்படங்களில் நடித்து வருகின்றனர்.அதிலும் பிரபு தற்பொழுது கதாப்பாத்திரங்களுக்கு முக்கியத்துவம் உள்ள திரைப்படங்களில் நடித்து வருகின்றார். அதே போல இவருடைய மகனான விக்ரம் பிரபுவும் கதாநாயகனாக நடித்து வருகின்றார்.


மேலும் நடிகர் திலகம் சிவாஜி கணேசனுக்கு சொந்தமான சாந்தி தியேட்டர் விற்பனை தொடர்பாக பிரபு மற்றும் ராம் குமார் ஆகியோருக்கு எதிராக சிவாஜி கணேசன் மகள்கள் சாந்தி மற்றும் ராஜ்வி ஆகியோர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். 

இந்த வழக்கில் சாந்தி தியேட்டர் சொத்துக்களில் தங்களுக்கு பங்கு கொடுக்காமல் ஏமாற்றி விட்டதாக பிரபு மற்றும் ராம்குமார் மீது குற்றம் சாட்டப்பட்டிருந்தது. இந்த நிலையில் இந்த வழக்கு இன்று சென்னை உயர்நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தபோது இந்த மனுவை தள்ளுபடி செய்வதாக உயர்நீதிமன்ற நீதிபதிகள் அறிவித்தனர். இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.

 

Advertisement

Advertisement

Advertisement