சீரியல் நடிகை வைஷாலி டக்கர் தற்கொலையில் வெளியாகியுள்ள பகீர் தகவல் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சசுரால் சிமர் கா, சூப்பர் சிஸ்டர், மன்மோகினி 2 போன்ற இந்தி சீரியல்களில் நடித்தவர் வைஷாலி தாக்கர். இவர் மத்திய பிரதேசத்தின் இந்தூரில் வசித்து வந்து தனது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார். இதுகுறித்து தகவல் அறிந்து வந்த போலீசார், அவரது உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.
இதனைத் தொடர்ந்து வைஷாலி தற்கொலை செய்த அறையை சோதனை செய்த போலீசார் 5 பக்க தற்கொலை கடிதத்தையும் கைப்பற்றியுள்ளனர். அதில், சில காலம் தான் மன அழுத்தத்தில் இருந்து வந்ததாகவும் தனது முன்னாள் காதலரால் தொடர்ந்து துன்புறுத்தப்பட்டு வந்ததாகவும் தெரிவித்துள்ளார்.
அத்தோடு அவர் தன்னை திருமணம் செய்து கொள்ளவும் மாட்டார், வேறு யாரையும் திருமணம் செய்ய அனுமதிக்கவும் மாட்டார் என்றும் கடிதத்தில் தெரிவித்துள்ளார். முன்னாள் காதலனுக்கு திருமணமாகி இரண்டு குழந்தைகள் உள்ளதாகவும் கூறியுள்ளார். நடிகை வைஷாலி தாக்கருக்கு கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் அபிநந்தன் என்பவருடன் நிச்சயதார்த்தம் இடம்பெற்றது.
தனக்கு நிச்சயதார்த்தம் ஆன தகவலை ரசிகர்களுடன் பகிர்ந்து கொண்ட வைஷாலி வருங்கால கணவர் கென்யா நாட்டை சேர்ந்த பல் மருத்துவர் எனவும் தெரிவித்துள்ளார்.. ஆனால் அடுத்த ஒரு மாதத்தில் அபிநந்தனை திருமணம் செய்யப்போவதில்லை என்றும் கூறியுள்ளார் வைஷாலி. திருமணம் நின்று போனதை தொடர்ந்து தனது நிச்சயதார்த்த வீடியோவை சமூக வலைதளப்பக்கத்தில் இருந்து நீக்கியிருக்கிறார் வைஷாலி.
இதனைத் தொடர்ந்த கடிதத்தில் உள்ள தகவலின் படி விசாரணையை முடுக்கி விட்டுள்ளனர் போலீசார். இந்நிலையில் முக்கிய தகவலாக நடிகை வைஷாலிக்கு பக்கத்து வீட்டுக்காரரான ராகுல் என்பவராலும் தொல்லை இருந்து வந்துள்ளது தெரியவந்துள்ளது. மேலும் ராகுல் கொடுத்த டார்ச்சர் தான் வைஷாலி இப்படி ஒரு முடிவை எடுக்க காரணம் என்றும் தெரியவந்துள்ளது.
வைஷாலி வேறு ஒருவரை திருமணம் செய்ய இருந்ததையும் அதை ராகுல் தடுத்ததும் தெரியவந்துள்ளது. வைஷாலி தாக்கர் தற்கொலை செய்து கொண்டதும் ராகுல் தலைமறைவாகிவிட்டார். அவரை தேடும் பணியில் போலீசார் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். நடிகை வைஷாலி தாக்கர் தற்கொலைக்கு பக்கத்து வீட்டுக்காரரும் காரணம் என்ற தகவல் சினிமா வட்டாரத்தில் nபரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Listen News!