• May 18 2024

புதிய சீரியலில் ஹீரோவாக நடிக்கும் நடிகர் கார்த்திக் ராஜ்..ரசிகர்களுக்கு வெளியான சூப்பர் தகவல்..!

Aishu / 1 year ago

Advertisement

Listen News!

கனா காணும் காலங்கள் எனும் சீரியல் மூலம் ரசிகர்கள் மத்தயில் பிரபலமானவர் நடிகர் கார்த்திக் ராஜ். இதன்பின், அதே தொலைக்காட்சியில் ஆபிஸ் சீரியலில் நடித்து  பட்டையை கிளப்பி இருந்தார்.

ஆனாலும் இவருக்கென்று தனி அங்கீகாரத்தை கொடுத்த சீரியல் என்றால் செம்பருத்தி தான்.  ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான செம்பருத்தி சீரியல் தான் இவருக்கு முன்னணி சின்னத்திரை நட்சத்திரம் எனும் அந்தஸ்தை பெற்று கொடுத்தது.



ஆனால், இவர்  தீடீரென செம்பருத்தி சீரியலில் இருந்து விலகினார். இது ரசிகர்கள் பலருக்கும் பெரிய அப்சட்டை கொடுத்தது என்று தான் கூற வேண்டும்.மீண்டும் எப்போது கார்த்திக் ராஜ் சீரியலில் நடிக்க வருவார் என்று ரசிகர்களால் எதிர்பார்க்கப்பட்டு வந்தது.


இவ்வாறுஇருக்கையில், ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாக இருக்கும் புதிய சீரியல் ஒன்றில் ஹீரோவாக நடிக்க ஒப்பந்தம் ஆகியுள்ளாராம் கார்த்திக் ராஜ்.

100 சதவீதம் இது உறுதியாகிவிட்டது என்று தகவல் வெளியாகியுள்ளது. இதனால் கார்த்திக் ராஜின் ரசிகர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.



Advertisement

Advertisement