• May 04 2024

9மாதம்...நயன்தாராவிற்கு மருத்துவர்கள் கூறிய அதிர்ச்சி தகவல்

Aishu / 1 year ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் காதல் ஜோடியாக விளங்கிய நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவன் ஆகிய இருவரும் கடந்த ஜுன் மாதம் 9ம் திகதி மிகவும் பிரமாண்டமாகத் திருமணம் செய்து கொண்டனர். இந்தத் திருமணத்தில் பிரபலங்கள் மற்றும் உறவினர்களும் கலந்து கொண்டனர்.

திருமணம் முடிந்த கையோடு இருவரும் வெளிநாடுகளுக்கு சென்று ஹனிமூன் கொண்டாடி வந்தனர்.


சில நாட்களுக்கு முன் நயன்தாரா கர்ப்பமாக இருப்பதாக இணையத்தில் வதந்திகள் வெளிவந்தது. இந்நிலையில், நடிகை நயன்தாரா விரைவில் குழந்தை பெற்றுள்ள முடிவு எடுத்துள்ளாராம்.

எனினும் அதற்காக புதிதாக எந்த படத்திலும் அவர் கமிட்டாகவில்லையாம். அதே போல் கமிட்டான படங்களிலும் நடித்து முடித்துவிட்டாராம்.


இவ்வாறுஇருக்கையில், குழந்தை பெற்றுக்கொள்வது குறித்து மருத்துவர்களை நயன்தாரா - விக்னேஷ் சிவன் அணுகியுள்ளனர்.

நயன்தாராவை பரிசோதித்து பார்த்ததில் அவர் 9 மாதம் மருத்துவ கண்காணிப்பில் இருந்து ஓய்வு எடுக்கவேண்டுமென்று மருத்துவர்கள் தெரிவித்துள்ளார்களாம்.


இந்த செய்தி சற்று அதிர்ச்சியை அவர்களுக்கு கொடுத்திருந்தாலும் விரைவில் நயன்தாரா அனைவருக்கும் நல்ல செய்தி சொல்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


Advertisement

Advertisement

Advertisement