• May 04 2024

நீங்க போய் கதையை புரிஞ்சிட்டு வாங்க- தாறுமாறான கேள்வி கேட்ட பத்திரிகையாளரை கிண்டலடித்த கார்த்தி

stella / 1 year ago

Advertisement

Listen News!

மணிரத்னம் இயக்கத்தில் அவரது கனவு திரைப்படமாக உருவாகியுள்ளது பொன்னியின் செல்வன் படம். இந்தப் படத்தின் இசை மற்றும் ட்ரெயிலர் வெளியீடு இன்றைய தினம் சென்னை நேரு உள் விளையாட்டு அரங்கத்தில் நடைபெறுகிறது.

நடிகர்கள் விக்ரம், ஜெயம்ரவி, கார்த்தி, ஐஸ்வர்யா ராய், த்ரிஷா, ஐஸ்வர்யா லெக்ஷமி, ஜெயராம், பார்த்திபன் உள்ளிட்டவர்கள் நடிப்பில் பிரம்மாண்ட படைப்பாக உருவாகியுள்ளது இப்படம்.


வரும் 30ம் தேதி சர்வதேச அளவில் வெளியாகவுள்ள இப்படம் 5 மொழிகளில் வெளியாகவுள்ளது. இந்த நிலையில் இன்றைய தினம் நடைபெறும் ட்ரெய்லர் வெளியீட்டு விழாவில் கலந்து கொண்ட கார்த்தி பத்திரிகையாளர்களைச் சந்தித்தார்.

 அப்போது அவரிடம் பல்வேறு கேள்விகளை பத்திரிகையாளர்கள் கேட்டனர்.ஆயிரத்தில் ஒருவன் படத்திலேயே நீங்க சோழனாக நடித்தீர்களே என ஒருவர் கேட்க, "நான் சோழ தூதுவனாக தான் நடித்தேன், நீங்க போய் கதையை புரிஞ்சிட்டு வாங்க" என அவரை கிண்டல் செய்தார் கார்த்தி.


மேலும் பொன்னியின் செல்வன் கதையில் அந்த காலகட்டத்திலேயே வாழ்வது சவாலான விஷயம் என்றும் கார்த்தி கூறி இருக்கிறார்.அத்தோடு இப்படத்தில் சிறப்பு விருந்தினராக கமல் மற்றும் ரஜினி ஆகியோர் கலந்த கொண்டுள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement

Advertisement