• May 05 2024

இரண்டாவது திருமணம் செய்துவிட்டு தான் பேசுவீங்களா?- இமானின் பேச்சுக்கு பதிலடி கொடுத்த பிரபலம்- இப்படியும் நடந்ததா?

stella / 6 months ago

Advertisement

Listen News!

சிவகார்த்திகேயன் தனக்கு மிகப்பெரிய துரோகம் செய்து விட்டதாகவும், குழந்தைகள் நலனுக்காக அதை வெளியில் சொல்ல முடியாது என்றும் இசையமைப்பாளர் டி இமான் அண்மையில் பேட்டி ஒன்றில் கூறியது, மிகப்பெரிய சர்ச்சையாக வெடித்துள்ளது.

இமான் தனது முதல் மனைவி மோனிகாவை விவாகரத்து செய்ததிற்கு சிவகார்த்திகேயன் தான் காரணம் என்று சோஷியல் மீடியாவில் பலவிதமான வதந்திகள் பரவி வருகின்றன.இந்த நிலையில் இதற்கு விளக்கம் கொடுக்கும் விதமாக பிரபலம் ஒருவர் உண்மையை தெரிவித்துள்ளார்.


அதாவது,துரோகம் செய்துவிட்டார் என்று சிவகார்த்திகேயனைப் பார்த்து சொல்லும் தகுதி இமானுக்கு இல்லை. நான் எந்த பெண் பின்னும் சென்றது இல்லை. எந்த பெண்ணுடனும் எனக்கு பழக்கம் இல்லை. ஆனால், பல பெண்கள் என்னிடம் தவறான சேட்டிங் செய்திருக்கிறார்கள் என்று இமானே ஒரு பேட்டியில் கூறியிருக்கிறார். அப்போ இது இமான் மோனிகாவுக்கு செய்த துரோகம் தானே. 

 இமான் பொது இடத்தில் ஆன்மீக சிந்தனை குணம் உள்ளவர் போல எப்போதும் காட்டிக்கொள்வார். ஆனால், உண்மையான அவரின் குணம் என்ன என்பது அவருடன் சினிமாவில் நெருங்கி பழகியவர்களுக்குத்தான் தெரியும். கோரஸ் பாட வரும் பெண்களிடமும் ஆசை வார்த்தை பேசி காரியத்தை சாதித்துக்கொள்வார். இந்த விஷயம் தெரிந்து தான் மோனிகா இமானிடம் பல முறை சண்டை போட்டு இருக்காங்க. ஆனால், இமானின் அப்பா மகனின் வாழ்க்கை வீணாகிவிடக்கூடாது என்று இருவரையும் சமாதானப்படுத்தினார்.


இந்த நேரத்தில் தான், குடும்பத்தில் ஒருத்தரான சிவகார்த்திகேயனிடம் அழுது புலம்பி இருக்கிறார் மோனிகா. இதுகுறித்து, இமானிடம் சிவகார்த்திகேயன் பல முறை பேசியும், அவர் திருந்தாததால், விவாகரத்து செய்துவிட்டு பிரிந்து வாழ்வதுதான் சரி என்று சிவகார்த்திகேயன், மோனிகாவிற்கு அறிவுரை கூறியுள்ளார். 

இதைத்தான் இமான் சிவகார்த்திகேயன் துரோகம் செய்தது போல பேசி இருக்கிறார். அவர் பேசியது ஒருபுறம் என்றால் அதற்கு கண்ணு காது வைத்து இணையத்தில் பல வதந்திகள் பரவி வருகிறது. இரண்டாவது திருமணம் செய்துவிட்டு மூன்றாண்டு கழித்து இந்த விஷயத்தை சொல்ல என்ன காரணம். நல்ல மனிதரான சிவகார்த்திகேயன் மீது அபாண்டமாக பரவி வரும் வதந்தியை பொருத்துக்கொள்ள முடியாமல் தான் இந்த விஷயத்தை இப்போது சொன்னேன் என்று இருவரிடமும் நெருங்கி பழகிய நண்பர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

Advertisement

Advertisement

Advertisement