• Sep 20 2024

டிமான்ட்டி காலனி 2 படம் வெற்றி பெற்றால் இப்படியொரு விஷயம் நடக்குமா?

Aathira / 1 month ago

Advertisement

Listen News!

கடந்த 2015 ஆம் ஆண்டு வெளியான ஹாரர் படம் தான் டிமாண்டி காலனி. இந்த படம் வெளியாகி மாபெரும் வெற்றி பெற்றது. இதன் வெற்றியை தொடர்ந்து இரண்டாம் பாகம் வெளியாகும் என கூறப்பட்டது. இதற்காக ரசிகர்கள் பல எதிர்பார்ப்பில் காத்திருந்தார்கள்.

கிட்டத்தட்ட 9 ஆண்டுகள் கழித்து தற்போது இந்த திரைப்படத்தின் இரண்டாம் பாகம் இன்றைய தினம் சுதந்திர தினத்தை முன்னிட்டு உலக அளவில் ரிலீஸ் ஆனது. தற்போது வரையில் இந்த படத்திற்கு பாசிட்டிவ் விமர்சனங்கள் தான் குவிந்துள்ளன.

இந்த திரைப்படத்தில் அருள் நிதியுடன் பிரியா பவானி சங்கர், அருண்பாண்டியன், அர்ச்சனா ரவிச்சந்திரன் உட்பட பலர் முக்கிய கேரக்டரில் நடித்திருக்கிறார்கள். இந்த படத்தை அஜய் ஞானமுத்து இயக்கியுள்ளார்.


சமீபத்தில் பேட்டி ஒன்றில் கலந்து கொண்ட அருள்நிதி கூறுகையில், டிமாண்டி காலனி 2 திரைப்படம் குறித்து பேசி உள்ளார். அதில் அவர் டிமான்டி காலனி திரைப்படத்தில் முதல் பாகத்தில் தொடர்பு இருக்கு. அந்த விஷயத்தை அஜய் ஞானமுத்து ரொம்ப சிறப்பா திரைக்கதை கொண்டு வந்துள்ளார். 

முதல் பாகத்தில் ஸ்ரீனி என்ற கதாபாத்திரத்தில் நடித்திருந்தேன். படம் முடியும்போது அந்த கேரக்டர் இறந்து விட்டதாக காண்பித்துள்ளோம். இந்தப் படத்தில்  ரகுங்கற என்ற கேரக்டரில் நடித்துள்ளேன். இரண்டாம் பாகம் பண்ணும் போது மூன்று, நான்காம் பாகங்களுக்கான கதையை ரெடி செய்து விட்டார் இயக்குனர். இந்த படத்தின் வெற்றியைத் தொடர்ந்து தான் அடுத்த அடுத்த பாகங்களை எடுக்க திட்டமிட்டுள்ளோம் என அருள்நிதி தெரிவித்துள்ளார்.

Advertisement

Advertisement