• May 04 2024

பொன்னியின் செல்வன் திரைப்படம் முதல் நாளில் மட்டும் இத்தனை கோடி வசூல் செய்யுமா?

stella / 1 year ago

Advertisement

Listen News!

சோழப் பேரரசின் கதையை மையமாக வைத்து எழுதப்பட்ட ஒரு நாவல் தான் பொன்னியின் செல்வன்.இந்த நாவலை இயக்குநர் மணிரத்னம் படமாக இயக்கியுள்ளார்.இப்படத்திற்கு இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ளார்.

இப்படம் வரும் செப்டம்பர் 30ம் தேதி 5 மொழிகளில் ரிலீஸ் ஆக இருக்கிறது. இதனால் படக்குழுவினர் தீவிரமாக பட ப்ரமோஸன் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.


இது தவிர தனித்தனியாகவும் பேட்டிகள் கொடுத்து வருகிறார்கள், அதுவும் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. ரூ. 500 கோடி பட்ஜெட்டில் தயாரான இப்படம் எவ்வளவு வசூலிக்கும் என்ற எண்ணம் இப்போதே தொடங்கிவிட்டது.

படத்திற்கான டிக்கெட் புக்கிங் தாறுமாறாக நடந்து வருகிறது,அதன்படி தமிழகத்தில் டிக்கெட் புக் ஆவதை வைத்து பார்க்கையில் படம் முதல் நாளில் ரூ. 25 கோடி வரை வசூல் செய்யும் என்றும் புதிய தகவல் வெளியாகியுள்ளதும் குறிப்பிடத்தக்கது.


Advertisement

Advertisement

Advertisement