• May 02 2024

பிரிந்த பிறகு ‘அது மட்டும்’ எதற்கு..? சமந்தா மீது கடுப்பான நாக சைதன்யா..! என்ன சொல்லியிருக்காரு பாருங்க...

Jo / 11 months ago

Advertisement

Listen News!

2010ம் ஆண்டு வெளியான யே மாயா சேசாவே திரைப்படம் மூலம் நாயகியாக அறிமுகமானவர் சமந்தா. கெளதம் மேனன் இயக்கிய இந்தப் படம் தமிழில் வெளியான விண்ணைத்தாண்டி வருவாயா படத்தின் தெலுங்கு வெர்ஷனாக உருவானது. தமிழில் சிம்பு - த்ரிஷா நடித்த கேரக்டரில், தெலுங்கில் நாக சைதன்யாவும் சமந்தாவும் நடித்திருந்தனர்.

இந்தப் படத்தில் சமந்தா - நாக சைதன்யா கெமிஸ்ட்ரி செம்மையாக ஒர்க் அவுட் ஆனதால், அடுத்தடுத்து மேலும் சில படங்களில் ஜோடி சேர்ந்தனர். மனம், மகாநதி, மஜிலி, ஓ பேபி படங்களில் நடித்த இருவரும் சில வருடங்களாக காதலித்து வந்தனர். பின்னர் 2017ல் இருவீட்டார் சம்மதத்துடன் மிக பிரம்மாண்டமாக திருமணம் நடைபெற்றது.

அதன்பின்னர் 2021ல் இருவரும் பிரிவதாக தங்களது சமூக வலைத்தள பக்கங்களில் அறிவித்தனர். சமந்தா கவர்ச்சியாக நடிக்கக் கூடாது என நாக சைதன்யாவும் அவரது குடும்பத்தினரும் ஆர்டர் போட்டதாகவும், அதுதான் பிரச்சினை ஆனது என்றும் சொல்லப்படுகிறது.

இந்நிலையில், நாக சைதன்யாவை விவாகரத்து செய்துகொண்டாலும் இருவரும் நட்பாக இருக்கிறோம் என சமந்தா ஒரு பேட்டியில் கூறியிருந்தார்.


இதனை குறிப்பிட்டு நாக சைதன்யாவிடம் கேள்விக் கேட்கப்பட்டது. வெங்கட் பிரபு இயக்கியுள்ள கஸ்டடி படத்தில் நாக சைதன்யா ஹீரோவாக நடித்துள்ளார். தமிழ், தெலுங்கு மொழிகளில் உருவாகியுள்ள இந்தப் படத்தின் ட்ரெய்லர் வெளியீட்டு விழா நேற்று மாலை சென்னையில் நடைபெற்றது. இதில், நாக சைதன்யா, வெங்கட் பிரபு உட்பட கஸ்டடி படக்குழுவினர் கலந்துகொண்டனர்.

மேலும், கஸ்டடி படத்தின் ப்ரோமோஷன் நிகழ்ச்சிகளிலும் நாக சைதன்யா பங்கேற்றார். அப்போது தான் சமந்தாவின் கருத்து குறித்து கேட்கப்பட்டது. அதற்கு பதிலளித்த நாக சைதன்யா, பிரிய வேண்டும் என முடிவு செய்துவிட்டால் அதற்கு பிறகு நட்பு எதற்கு? இது என்னை மிகவும் எரிச்சல் அடைய செய்கிறது. எனக்கு அப்படிப்பட்ட நட்பு தேவையில்லை என மிக காட்டமாகக் கூறியுள்ளார். நாக சைதன்யாவின் இந்த பதில் திரையுலகில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தொடர்ந்து, பாக்கியலட்சுமி தொடரில் கோபியாக நடிக்கும் சதீஷ், உண்மையில் தொடரை விட்டு வெளியேறுகிறாரா, அவருக்கு என்ன ஆயிற்று என்று மற்றொரு ரசிகர் கேள்வி எழுப்பினார். அதற்கு பதிலளித்த ரேஷ்மா பசுபுலேட்டி, அவர் சீரியசாக வெளியேறினாரா என்பது குறித்து தனக்கு தெரியாது என்றும், அடுத்த ஷெட்யூலில் அவரை பார்க்கும்போது இதுகுறித்து கேட்டு சொல்வதாகவும் தெரிவித்தார்.

முன்னதாக பாக்கியலட்சுமி தொடரில் இருந்து தான் விலகவுள்ளதாக ரேஷ்மா பேட்டியொன்றில் தெரிவித்திருந்தார். ஆனால் பின்னர், அதில் உண்மையில்லை என்று மறுப்பு தெரிவித்திருந்தார். தான் இந்தத் தொடரின்மூலம் ஏராளமான ரசிகர்களை பெற்றுள்ள நிலையில், அதிலிருந்து விலகப் போவதில்லை என்று தெரிவித்துள்ளார். ஆனால் கோபியை தொடர்ந்து இவரும் இந்தத் தொடரில் இருந்து விலகவுள்ளதாக அடுத்தடுத்து தகவல்கள் வெளியாகி வருகின்றன.

Advertisement

Advertisement

Advertisement