• May 18 2024

'எங்க அம்மா சரியான பட்டிக்காடு'- தன்னைத் தானே கழுவி ஊற்றிய குக்வித் கோமாளி ஸ்ருதிகா

stella / 1 year ago

Advertisement

Listen News!

தமிழில் முக்கிய தொலைக்காட்சிகளில் ஒன்றான விஜய்டிவியில் சூப்பர் ஹிட்டாக ஓடிக் கொண்டிருக்கும் ரியாலிட்ரி ஷோ தான் குக்வித் கோமாளி. இந்த நிகழ்ச்சியில் தற்பொழுது மூன்றாவது சீசன் ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கின்றது. இந்த நிகழ்ச்சிக் கென்று தனி ரசிகர் பட்டாளமும் உள்ளது.

அந்த வகையில் இந்த நிகழ்ச்சியில் பங்கு கொண்டதன் மூலம் பிரபல்யமானவர் தான் ஸ்ருதிகா. நடிகையான இவருக்கு இந்த நிகழ்ச்சி மூலம் பெரிய வரவேற்புக் கிடைத்துள்ளது. அத்தோடு இவர் இந்த நிகழ்ச்சியில் முதலாவது இறுதிப் போட்டியாளராகவும் தேர்வாகியுள்ளார்.

இந்த நிலையில் இவர் பிரபல சேனல் ஒன்றில் பேசியபோது கூறிய விடயங்களாவன.

நான் 14 வயதினிலேயே சினிமாவிற்கு வந்து விட்டேன். ஒரு நாள் ஹொட்டல் ஒன்றில் சாப்பிட்டுக் கொண்டிருக்கும் போது என்னைப் பார்த்த இயக்குநர் ஒருவர் நடிக்க வரும் படி கூறினார். ஆனால் அம்மா மறுத்து விட்டார். பின்பு படங்களில் நடிக்காவிட்டாலும் பரவாயில்லை விளம்பரங்களில் நடிக்க வாங்க என்று கூறி விட்டு சென்று விட்டனர்.

பின்பு அவர்கள் எப்படியோ நான் நடிகர் தேங்காய் சீனிவாசனின் பேர்த்தி என்பதை அறிந்து விட்டனர். அதன் பின்பு ஒரு நாள் போன் பண்ணி ஒரு படத்தில் நடிக்க கூப்பிட்டார்கள். நானும் ஏதோ ஒரு சின்ன கதாப்பாத்திரம் என்று நினைத்தேன். ஆனால் சூர்யாவின் ஸ்ரீ படத்தில் கதாநாயகியாக நடிக்க வாய்ப்புக் கிடைத்தது.

எனக்கு சந்தோஷம் தாங்க முடியவில்லை ஆனால் வீட்டில அம்மா சம்மதிக்கல. இருந்தாலும் நான் அடம் பிடிச்சேன். எங்க அம்மா பார்க்க தான் மாடர்ன் மாதிரி இருப்பாங்க ஆனால் வீட்டில ரொம்ப பட்டிக்காடு மாதிரி தான் நடந்துப்பாங்க. மேக்கப் பண்ண விடமாட்டாங்க டான்ஸ் ஆட விடமாட்டாங்க தலை நிறைய எண்ணெய் வைச்சிருக்கனும் அவங்க சொல்லுறதை தான் கேட்கணும் அது மாதிரி தான் நானும் இருப்பேன்.

அதனால படம் நடிக்க போகவே கூடாது என்று கூறிட்டாங்க ஆனால் அப்பா எனக்கு சர்ப்போட் பண்ணினாங்க சரி என்று நானும் நடிக்க போனேன். அந்த படத்தில் நடிக்கும் போது எனக்கு டான்ஸ் சரியா வராது, அழ வராது, நடிக்க வராது, மேக்கப் சென்ஸ் சுத்தமா இல்ல ,செமகுண்டா வேற இருப்பனா பார்க்க எனக்கே சகிக்க முடியாமல் இருக்கும். இருந்தாலும் ஒரு மாதிரி அந்த படத்தை நிறைய டேக் பண்ணி தான் முடிச்சேன்.

அந்த படத்தில என்னால எல்லாருக்குமே வெறுப்பு தான் உண்டாச்சு சூர்யா சேர் தான் பாவம். நான் எத்தனை டேக் போனாலும் அமைதியா பரவாயில்ல நடிங்க என்று என்னை ஊக்கப்படுத்துவார். அதுக்கப்பிறமும் சில படம் பண்ணினேன். இருந்தாலும் என்னால ஒழுங்கா நடிக்க முடில அதனால சினிமாவில இருந்து விலகிட்டேன் என்று கூறியுள்ளார்.

பிற செய்திகள்

சமூக ஊடகங்களில்:

Advertisement

Advertisement