• May 07 2024

என்னது அமிர்தாவின் கழுத்தில் தாலி காட்டியது எழில் இல்லையா..? அப்போ யாரு.. வைரலாகும் வீடியோ.. ஷாக்கான ரசிகர்கள்..!

Prema / 1 year ago

Advertisement

Listen News!

பல ஹிட் சீரியல்களை ரசிகர்களுக்கு கொடுப்பதில் விஜய் டிவி முன்னணி வகித்து வருகின்றது. இதில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல்களில் ஒன்று தான் 'பாக்கியலட்சுமி'. இந்த சீரியலில் கடந்த ஒரு வாரத்திற்கும் மேலாக எழில்-வர்ஷினி குறித்த திருமண காட்சிகள் தான் வந்திருக்கின்றன. 


இருப்பினும் பின்பு வில்லி வர்ஷினி உடன் நடக்க இருந்த திருமணத்தை நிறுத்திவிட்டு எழிலுக்கு அவர் உயிருக்கு உயிராக காதலித்து வரும் அமிர்தா என்ற பெண்ணுடனேயே திருமணத்தை நடத்தி வைக்கிறார் பாக்கியா.


இந்தத் திருமணத்தில் பாக்யா தவிர அந்தக் குடும்பத்தில் இருக்கும் வேறு யாருக்கும் உடன்பாடு இல்லை. அதனால் எழில் - அமிர்தா திருமணம் முடித்து மணக்கோலத்தில் வீட்டுக்கு வர பாட்டி அவர்களை வாசலிலேயே நிற்கவைத்து அப்படியே வெளியில் போக சொல்கிறார்.


இருப்பினும் அதன் பின்னர் அவரை சமாளிக்க அந்த சீரியலில் படாத பாடு படுகிறார் பாக்யா. இவ்வாறாக பல திருப்பங்களோடு ஒளிபரப்பாகும் இந்த சீரியலில் அமிர்தாவாக நடிப்பவர் ரித்திகா. இவர் தற்போது வெளியிட்டுள்ள வீடியோ ஒன்று ரசிகர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கி இருக்கின்றது.

அதாவது உண்மையான திருமணம் என்றால் மாப்பிள்ளை தான் பெண் உடைய கழுத்தில் தாலி காட்டுவார். ஆனால் இது சீரியல் சீரியல் கல்யாணம் ஆச்சே. அதனால் "பாரதி கண்ணம்மா' சீரியலில் தாலியை ரித்திகா தான் தன்னுடைய கையால் கட்டி இருக்கின்றார். 


இந்த வீடியோவைப்  ஷாக்கான ரசிகர்கள் "சீரியல் கல்யாணம் என்றால் இப்படித்தான் போல" எனக் கூறி வருகின்றனர்.

Advertisement

Advertisement

Advertisement