தமிழ் சினிமாவில் நம் அனைவருக்கும் நெகிழ்ச்சியும், நகைச்சுவையும் தந்தவர், பிரபல நடிகை கோவை சரளா. இவர் காமெடியின் கருப்பொருள் மட்டுமல்லாமல், கதைகளின் உணர்வுப் பகுதியையும் தாங்கும் திறமையை பல படங்களில் நிரூபித்திருக்கிறார். நீண்ட வருடங்களாக திரையுலகில் வெற்றிகரமாக இயங்கி வரும் இவர், தனிப்பட்ட வாழ்க்கை குறித்து ஆழமான கருத்துகளை சமீபத்திய ஒரு நேர்காணலில் பகிர்ந்துள்ளார்.
அந்த நேர்காணலில், தான் கல்யாணம் செய்யாததற்காக ஒருபோதும் வருத்தப்பட்டதில்லை என்றும், அதற்குப் பின்னணி என்னவென்றும் மிக நிதானமாகவும் நியாயமாகவும் விளக்கியுள்ளார்.
நடிகைகளிடம் பாரம்பரியமாகக் கேட்கப்படும் கேள்விகளில் ஒன்று: "ஏன் கல்யாணம் ஆகவில்லை?" என்ற ஒன்று. அந்தக் கேள்விக்கு தற்பொழுது கோவை சரளா அளித்த பதில் மிகவும் நேர்மையானதாகவும், வாழ்க்கையின் உண்மையையும் பேசுவதாகவும் இருந்தது.
"எனக்கு கல்யாணம் ஆகலன்னு நான் கவலைப்படவே இல்ல. இப்ப கல்யாணம் பண்ணவங்கள பாத்து சிரிச்சிட்டு இருக்கேன்," எனச் சிறிய நகைச்சுவையுடன் ஆரம்பித்த அவர்,
"நான் சொன்னா கேட்க மாட்டீங்க... கல்யாணம் பண்ணிட்டால் மட்டும் கடைசி வரை புருஷன் கூடவா வரப்போறாரு? அவர் ஓடிப் போறாரோ, இல்ல செத்துப் போறாரோ... எப்படியும் ஒருநாள் போக தான் போறார். கடைசியில நான் தனியா தான் இருக்கணும்" எனத் தெரிவித்தார்.
அவருடைய இந்த நேர்மையான பதில், ஒரு பெண்மணியின் வாழ்க்கைப் பயணத்தை சமூக ஒழுங்குகள், எதிர்பார்ப்புகள் மற்றும் நம்பிக்கைகள் எவ்வாறு பாதிக்கின்றன என்பதை நம் முன் வெளிப்படையாக கூறுகின்றது.
Listen News!