• May 12 2024

சிவகார்த்திகேயன் செய்தது நம்பிக்கை துரோகம்- டி. இமான் சர்ச்சையை புட்டுப்புட்டு வைத்த பிரபலம்- ஆதாரம் வைத்திருக்கின்றாரா?

stella / 6 months ago

Advertisement

Listen News!

கடந்த ஆண்டு எதற்கும் துணிந்தவன் முதல் கழுவேர்த்தி மூர்க்கன் வரை பல படங்களுக்கு இசையமைத்து வந்த டி. இமானுக்கு சமீப காலமாக பெரிய படங்களுக்கு இசையமைக்கும் வாய்ப்புகள் வராமல் போனது. 

இந்நிலையில், சமீபத்தில் அவர் அளித்த பேட்டி ஒன்றில் தனக்கு நடிகர் சிவகார்த்திகேயன் மன்னிக்க முடியாத துரோகத்தை செய்து விட்டார் என்றும் அதை வெளியே சொன்னால் தனது பெண் குழந்தைகளின் எதிர்காலமே பாதிக்கும் என குண்டை தூக்கிப் போட்டு இருந்தார்.இந்த தகவலுக்கு பலரும் விளக்கம் கொடுத்து வருகின்றனர்.


இப்படியான நிலையில் இது குறித்து பிரபல பத்திரிகையாளரான பிஸ்மி ஒரு பேட்டியில் பேசியுள்ளார். அதாவது,"சிம்பு, தனுஷின் பர்சனல் பக்கங்கள் என்னவென்று மக்களுக்கு புரிந்துவிட்டது. ஆனால் சிவகார்த்திகேயனுக்கு அப்படி கிடையாது. அவரை பலரும் தங்கள் வீட்டு பிள்ளையாகவே நினைக்கிறார்கள். அந்த இமேஜ் இப்போது வெடித்திருக்கும் சர்ச்சையால் உடைந்து ஒரிஜினல் முகத்தை காண்பித்துவிட்டது. 

பிரபு நடித்த படங்கள் தொடர்ந்து ஹிட் ஆகிக்கொண்டிருந்தன. ஆனால் சின்னத்தம்பி படத்துக்கு பிறகு அவருக்கும் குஷ்பூவுக்கும் இருந்த உறவு பற்றி வெளியே தகவல் கசிந்தது. அது அவரது சினிமா கரியரை ரொம்பவே பாதித்தது. எப்போதுமே ஒரு நடிகரின் வளர்ச்சி என்பது அந்த நடிகர் நடித்த படங்களின் வெற்றி, தோல்வியை வைத்து நடக்கக்கூடியது. ஆனால் இந்த விஷயத்தில் அப்படி நடக்கவில்லை.


 பிரபுவுக்கு நடந்தது மாதிரியே சிவகார்த்திகேயனுக்கும் இப்போது நடந்திருக்கிறது. சினிமா நடிகர்கள் என்றாலே பெர்சனல் வாழ்க்கையில் கள்ளக்காதல், தொழிலில் கருப்பு பணம் என்பது எழுதப்படாத விதியாக இருக்கும். அவர்களது வாழ்க்கையில் இவை இரண்டையும் தவிர்க்க முடியாது. ஒன்றிரண்டு பேர் விதிவிலக்காக இருக்கிறார்கள்.

இமானுக்கு சிவகார்த்திகேயன் செய்தது நம்பிக்கை துரோகம். ஏனெனில் ஒருவர் உங்களை தம்பி மாதிரி பாவித்து வீட்டில் இடம் கொடுத்தால் அந்த இடத்தில் ரொம்பவே கண்ணியமாக நடந்துகொள்ள வேண்டும். அங்கு சென்று கேடுகெட்ட செயலை காண்பித்தால் அது மன்னிக்க முடியாத விஷயமாகும். இமான் ரொம்பவே அப்பாவியானவர். 

 அவர் அந்தப் பேட்டியில் சொன்னது எதேர்ச்சையாக நடந்தது. மக்கள் பல விஷயங்களை மன்னித்துவிடுவார்கள். சில விஷயங்களை மன்னிக்கவே மாட்டார்கள். அப்படிப்பட்ட ஒன்றுதான் நம்பிக்கை துரோகம். சிவகார்த்திகேயன் - டி.இமான் விஷயம் குறித்து பல மாதங்களுக்கு முன்பே எனக்கு தெரியும். இருவருக்கும் பொதுவான நண்பர் ஒருவரை எனக்கு தெரியும். அவர்தான் என்னிடம் இந்த விஷயத்தை ஆதாரங்களுடன் என்னிடம் பகிர்ந்தார் என்றும் தெரிவித்துள்ளார்.


Advertisement

Advertisement

Advertisement