• May 04 2024

ஈஸ்வரியிடம் உண்மையைக் கொட்டித் தீர்த்த கயல்... உயிரை மாய்க்க முயன்ற சிவசங்கரி... கயல் எடுக்கப் போகும் முடிவு என்ன..? சூடுபிடிக்கும் 'கயல்' சீரியல்..!

Prema / 8 months ago

Advertisement

Listen News!

சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும்  பிரபல ஹிட் சீரியல்களில் ஒன்று 'கயல்'. இந்த சீரியலானது டிஆர்பி ரேட்டிங்கில் முதன்மையான ஒரு இடத்தைப் பிடித்திருக்கின்றது. இந்த சீரியலில் அடுத்து என்ன நடக்கவுள்ளது என்பது குறித்து அறியப் பலரும் ஆவலாக உள்ளனர்.


இந்நிலையில் இன்றைய நாளுக்கான ப்ரோமோ வீடியோ வெளியாகி இருக்கின்றது. அதில் ஈஸ்வரி காயலிடம் "எதுக்காக உங்கள கொலை பண்ணுற அளவிற்கு வந்தாங்க" என்று கேட்கின்றார். அதற்கு கயல் "இது எல்லாத்துக்குமே என்னோட பெஸ்ட் ப்ரண்ட் உடைய அம்மா தான் காரணம்" என்கிறார். 


பின்னர் கயல் சிவசங்கரியிடம் "எல்லா உண்மையையும் சொல்லி உன் கேவலமான முகத்தை உடைக்கிறேன்" எனக் கூறி செல்கின்றார். சிவசங்கரி சொல்ல வேணாம் என எவ்வளவோ தடுத்தும் கயல் கேட்கவில்லை, இதனையடுத்து சிவசங்கரி பீங்கான் எடுத்து தன்னுடைய உயிரை மாய்க்க முயற்சிக்கின்றார். அதைப் பார்த்ததும் உடனே கயல் பயந்து ஓடி வருகின்றார்.


இவ்வாறாக இந்தப் ப்ரோமோ வீடியோ வெளிவந்திருக்கின்றது. 

Advertisement

Advertisement

Advertisement