• Apr 28 2024

திருமணம் முடிந்த கையோடு..விக்கியைப் பிரிகின்றாரா நயன்..? தீயாய் பரவும் தகவல்... பின்னணி என்ன..!

Prema / 1 year ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் பல ரசிகர்களின் மனங்களைக் கவர்ந்த ஜோடி என்றால் அது நயன்தாரா-விக்னேஷ் சிவன் ஜோடி தான். பல ஆண்டுகளாகக் காதலித்து வந்த தனது ஆசைக் காதலரை இந்த ஆண்டு கரம்பிடித்துள்ளார் நயன். மேலும் திருமணமான வேகத்தில் இரட்டை ஆண் குழந்தைகளுக்கு தாயாவும் மாறியுள்ளார்.


இருப்பினும் வாடகைத் தாய் மூலம் தாயானதால் நயன்தாரா பலவிதமான விமர்சனத்திற்கும் உள்ளாகியிருந்தார். அந்தவகையில் வாடகைத் தாய் மூலம் நயன்தாரா தாயானது பற்றி விசாரிக்க தனிக் குழுவை அமைத்தது தமிழக அரசு. அந்த சமயத்தில் தனக்கு ஆறு ஆண்டுகளுக்கு முன்பே பதிவுத் திருமணம் நடந்துவிட்டதாக அரசிடம் தெரிவித்தார் நயன்தாரா.


அந்தப் பிரச்சினை சற்று ஓய்ந்து விட்ட நிலையில் நயன்தாராவைப் பற்றிய மற்றொரு சர்ச்சை எழுந்துள்ளது. அதாவது நயன்தாராவுக்கும், விக்னேஷ் சிவனுக்கும் இடையே பிரச்சனையாம். அதனால் விக்னேஷ் சிவனை விவாகரத்து செய்ய முடிவு செய்திருக்கிறார் நயன்தாரா என்று ஒரு தகவல் வெளியாகி சமீபத்தில் தீயாக பரவியது. 

இந்நிலையில் இதுகுறித்த மாற்றுக் கருத்தொன்று தற்போது வெளியாகி இருக்கின்றது. அதாவது "நயன்-விக்கி பிரிவு குறித்து வெளியாகியுள்ள அந்தத் தகவலில் எந்தவிதமான உண்மையும் இல்லை. வெறும் வதந்தி தான். விக்னேஷ் சிவனுக்கும், நயன்தாராவுக்கும் இடையே எந்த பிரச்சனையும் இல்லை. மகன்கள் வந்த சந்தோஷத்தில் இருவரும் படு குஷியாக இருக்கிறார்கள்" எனக் கூறப்படுகின்றது.


மேலும் நயன்தாரா பற்றி அவ்வப்போது ஏதாவது வதந்தி பரவுவது சகஜமான ஒன்று தான். அதிலும் லாக்டவுன் நேரத்தில் நயன்தாரா பற்றி வதந்தி பரவாமல் இருந்தால் தான் ஆச்சரியம் என்கிற அளவுக்கு இதுபோன்ற ஏகப்பட்ட வதந்தி அந்த நேரத்தில் பரவியது குறிப்பிடத்தக்கது. 

எதுஎவ்வாறாயினும் இவ்வாறான வதந்திகள் அடிக்கடி வெளியாவதனால், இவற்றிற்கு விளக்கம் கொடுத்து தன் நேரத்தை வீணடிக்க விரும்பாமல் தன்னுடைய கேரியரில் கூடுதல் கவனம் செலுத்தி வருகின்றாராம் நயன்தாரா. 

Advertisement

Advertisement

Advertisement