தமிழ் சினிமாவில் இன்று உச்ச நட்சத்திரங்களில் ஒருவராக ஜொலித்து வருபவர் நடிகர் சிவகார்த்திகேயன். ஆரம்பத்தில் சின்னத்திரையில் இருந்து பின்னர் வெள்ளித்திரைக்கு வந்து இன்று தமிழ் சினிமாவின் வெற்றி நாயகனாக வலம் வருகின்றார்.
இருப்பினும் இடையில் இவரின் நடிப்பில் உருவான ஒரு சில படங்கள் தோல்வியை சந்தித்து சிவகார்த்திகேயனின் மார்க்கெட் சற்று சரியத் தொடங்கியது. அந்த சமயத்தில் தான் 'டாக்டர்' திரைப்படம் வெளியானது. நெல்சன் இயக்கத்தில் பிரமாண்டமாக வெளியான டாக்டர் திரைப்படம் சிவகார்த்திகேயனுக்கு மிகப்பெரிய வெற்றியை தேடி தந்தது.
இதைத்தொடர்ந்து அறிமுக இயக்குநர் சிபி சக்கரவர்த்தி இயக்கத்தில் 'டான்' திரைப்படம் வெளியாகி மாபெரும் வரவேற்பை பெற்று வெற்றி அடைந்தது. இந்நிலையில் தொடர்ச்சியாக இரண்டு வெற்றிகளை பெற்ற சிவகார்த்திகேயன் ஹாட்ரிக் வெற்றியை குறிவைத்து தற்போது 'பிரின்ஸ்' படத்தில் நடித்து முடித்துள்ளார்.
இப்படம் தீபாவளி ஸ்பெஷலாக இன்று திரையரங்குகளில் வெளியாகியுள்ளது. இதனிடையே நம்ம சிவகார்த்திகேயன் தன்னுடைய ஒவ்வொரு படத்தின் ரிலீசுக்கு முன்பும் தன் மனைவி செய்யும் விஷயம் ஒன்றை தற்போது பகிர்ந்துள்ளார்.
அதாவது "என் மனைவி ஒவ்வொரு படத்தின் ரிலீஸுக்கு முன்பும் எனக்கு ஒரு புது ஷேர்ட் ஒன்றை வாங்கி தருவார்" எனக் கூறியிருக்கின்றார். மேலும் "படம் ரிலீஸாகும் நாளன்று அந்த ஷேர்ட்டை போட்டுக்கொண்டுதான் நான் FDFS பார்க்க செல்வேன். மேலும் அதை ஒரு சென்டிமெண்டாக பல வருடமாக பின்தொடர்ந்து வருகின்றேன்" என்றார் சிவகார்த்திகேயன்.
இந்நிலையில் பிரின்ஸ் படத்தின் முதல் நாள் முதல் காட்சியையும் தன் மனைவியுடன் இணைந்து சிவகார்த்திகேயன் பார்த்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
இவ்வாறாக திருமணமான நாள் தொடக்கம் இன்றுவரை ஒற்றுமைக்கும், அன்பிற்கும் குறைவில்லாமல் இவர்கள் இருவரும் வாழ்ந்து வருவது பலரையும் மெய் சிலிர்க்க வைத்துள்ளது.
Listen News!