• May 11 2024

கேமரா முன்னாடி மாற்றி மாற்றி பேசி அட்ராசிட்டி செய்த தனலக்ஷ்மி- செம காமெடி பீஸ்மா நீ

stella / 1 year ago

Advertisement

Listen News!


பிக்பாஸ் நிகழ்ச்சியானது ஆரம்பித்து இன்றுடன் 11 நாட்கள் கடந்து விட்டன. இருப்பினும் நிகழ்ச்சி ஆரம்பித்த நாளிலிருந்து சூடு பிடித்து விட்டது. வீட்டிற்குள் நடக்கும் சவால்கள், சண்டை, கலகலப்பு உள்ளிட்ட பல விஷயங்கள் தான் மக்கள் மத்தியிலும் அதிகம் பேசுபொருளாக இருக்கும்.

சவால்கள், சண்டை, கலகலப்பு உள்ளிட்ட பல விஷயங்கள் தான் மக்கள் மத்தியிலும் அதிகம் பேசுபொருளாக இருந்து வருகின்றது. அந்த வகையில் நேற்றைய தினம்  தனலட்சுமி - அசல் கோலார் இடையே எதார்த்தமாக தொடங்கிய பேச்சு, வாக்குவாதமானது. 


 இதனிடையே தனலட்சுமி, பிக்பாஸ் கேமரா முன்பாக, “நான் இங்கே வந்திருக்கவே கூடாது.. நான் போக வேண்டும், என்னை வெளியே அனுப்பிவிடுங்கள்” என்பது போல் பேசிக் கொண்டிருந்தார். பின்னர் கொஞ்சம் ரிலாக்ஸான பிறகு தனலட்சுமி கேமரா முன் வந்து நின்று, “நான் அழுகிறேன்.. கஷ்டப்படுகிறேன் என்று சொன்னதால் என்னை வெளியே அனுப்பி விட வேண்டாம்.. நான் தான் கேட்டேன்.. தப்பு தான்.. மன்னித்து விடுங்கள்.. இந்த இடத்திற்கு மிகவும் கஷ்டப்பட்டு வந்திருக்கிறேன்..  எனவே நான் சொன்னேன் என்பதற்காக நீங்கள் என்னை வெளியே அனுப்பி விட வேண்டாம் என்று கேட்டுக்கொண்டார்.

 ஒருவேளை நீங்களாகவே வெளியே அனுப்பினால் அனுப்புங்கள்.. நான் ஓவராக ஏதாவது பண்ணினால் வெளியே அனுப்புங்கள்.. ஆனால் நான் இப்படி என்னை வெளியே அனுப்பி விடுங்கள் என்று புலம்புவதற்காக வெளியே அனுப்பி விட வேண்டாம். இந்த இடத்துக்கு கஷ்டப்பட்டு வந்திருக்கிறேன்” என்று மீண்டும் கேட்டுக் கொண்டார். இதனைப் பார்த்த ரசிகர்கள் விழுந்து விழுந்து சிரித்தனர் என்பதும் குறிப்பிடத்தக்கது


Advertisement

Advertisement

Advertisement