• May 01 2024

என்னங்கடா இது புது கதையா இருக்கு...! பிரியா பவானி சங்கரின் காதலுக்கு ஆப்பு வைத்தது சிம்புவா?

Jo / 1 year ago

Advertisement

Listen News!

வெள்ளித்திரை மற்றும் சின்னத்திரை நடிகர் நடிகைகளை போலவே, தொகுப்பாளர்கள, செய்தி வாசிப்பாளர்கள் உள்ளிட்டோருக்கு ரசிகர்கள் பட்டாளம் ஏராளம். அந்த வகையில், தமிழ் நியூஸ் தொலைக்காட்சியில் செய்தி வாசிப்பாளராக ரசிகர்கள் மத்தியில் அறிமுகமானவர் பிரியா பவானி ஷங்கர். இதில், இவர் பேசும் அழகு, நேர்த்தியான லுக் போன்றவற்றால் இவருக்கு தனி ரசிகர் பாலோயர்ஸ் உருவாகினர்.

பின்னர், ரசிகர்கள் ஆதரவால் இவருக்கு விஜய் தொலைக்காட்சியில் கல்யாணம் முதல் காதல் வரை என்னும் தொடரில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது. 2017ம் ஆண்டு, வைபவ் ஜோடியாக மேயாத மான் படத்தில் நடித்ததன் மூலம் நடிகையாக தமிழ் திரையுலகில் அடியெடுத்து வைத்தார். கடைக்குட்டி சிங்கம், மான்ஸ்டர், மாஃபியா, கசடதபற, ஓ மணப்பெண்ணே, யானை, திருச்சிற்றம்பலம் உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார்.

தற்போது, அடுத்தடுத்து, பத்து தல, அகிலன், ருத்ரன், டிமான்டி காலனி 2, பொம்மை, இந்தியன் 2 உள்ளிட்ட திரைப்படங்களில் கமிட்டாகி நடித்து வருகிறார். அண்மையில் கடற்கரையோரம் புதிய வீடு வாங்கி காதலர் ராஜவேலுடன் குடியேறினார். மேலும், புதியதாக ரெஸ்டாரண்ட் ஒன்றையும் திறந்து தனது கனவுகளை ஒன்றன் பின் ஒன்றாக நிறைவேற்றி வந்தார். இந்நிலையில், திடீரென பிரியா பவானி ஷங்கர் தனது காதலரை பிரிந்து விட்டதாக தகவல் வெளியாகி உள்ளது.

இதுகுறித்து, யூடியூப் சேனல் ஒன்றில் பேசிய சினிமா பத்திரிக்கையாளர் பயில்வான் ரங்கநாதன், பிரியாபாவனி சங்கர் தொலைக்காட்சி செய்திவாசிப்பாளராக இருந்து சினிமாவுக்கு வந்தவர். சில சீரியல்களிலும் நடித்துள்ள இவர், ஆபாசமான கதாபாத்திரங்களில் நடித்தது இல்லை, குடும்ப பாங்கான ரோல்களில் தான் நடித்து வருகிறார்.

இதனால் எதார்த்தமாக தனது காதலரையும் அறிமுகப்படுத்தினார். தனது புது பங்களாவில் காதலருடன் லிவ்விங் டு கெதர் வாழ்க்கை வாழ்ந்து வந்தார். இதனால், பிரியா பாவனி சங்கருக்கும் அவரது காதலுக்கும் கருத்துவேறுபாடு ஏற்பட்டுள்ளது. இந்த மன அழுத்தத்தில் இருந்த பிரியா, தனது நெருங்கிய தோழிகளிடம், என் காதலர் என்னை ஏமாற்றி விட்டார், நான் நினைத்த மாதிரி அவர் இல்லை என்று புலம்பி இருக்கிறார்.

சினிமாவில் நடிக்க வந்துவிட்டாலே, நடிகர்களுடன் நெருங்கி நடிக்க வேண்டும், வெளியூரில் படப்பிடிப்புக்காக பல நாட்கள் அங்கேயே தங்கி இருக்க வேண்டும் இது எல்லாம் தேவையில்லை என்று நினைத்த பிரியா பவானி சங்கரின் காதலன், திருமணத்திற்கு பின் சினிமாவை விட்டு விலகும்படி காதலன் கூறியுள்ளார். ஆனால் பிரியா பாவனி சங்கர் திருமணத்திற்கு பின்னும் தொடர்ந்து நடிப்பேன் என்று கூறியதாக தெரிகிறது. இதனால், இருவருக்கும் இடையே மனக்கசப்பு ஏற்பட்டு இருவரும் பிரிந்துவிட்டதாக பயில்வான் ரங்கநாதன் தெரிவித்து இருந்தார்.

சமீபத்தில் பிரியா பவானி சங்கர் சிம்பு நடிப்பில் வெளியான பத்து தல படத்தில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்திருப்பார். இதனிடையே, இவர்களின் காதல் பிரிவுக்கு சிம்புதான் காரணம் என்று ஒரு தகவல் தற்போது வெளியாகி வருவது குறிப்பிடத்தக்கது.


Advertisement

Advertisement

Advertisement