• May 02 2024

எங்களிடம் திருமண புகைப்படம் கூட கிடையாது- பிக்பாஸ் ஜோடிகளில் உருக்கமாகப் பேசிய தாமரை

stella / 1 year ago

Advertisement

Listen News!

பிக்பாஸ் சீசன் 5 இல் கலந்து கொண்டதன் மூலம் பிரபல்யமானவர் தான் தாமரைச் செல்வி. நாடகக் கலைஞரான இவர் தமிழகத்தில் நாடகக்கலை ரசிகர்களுக்கு நன்கு பரீட்சமானவர். நாடகத்தில் பாடல் பாடுவது, நடனம் ஆடுவது உள்ளிட்ட பன்முக திறமைகளை கொண்டவராகவும் காணப்படுகின்றார்.

இதனைத் தொடர்ந்து தற்பொழுது பிக்பாஸ் ஜோடிகள் நிகழ்ச்சியில் தனது கணவருடன் பங்குபற்றி வருகின்றார்.அந்த நிகழ்வில் இந்த வாரம் கல்யாண வாரம் எனக் கொண்டாடப்பகின்றது.அதில் பேசிய பார்த்தசாரதி "நாங்கள் ஒரு குறிப்பிட்ட சூழ்நிலையில் திருமணம் செய்துகொண்டோம்.

அது ஒரு சில நண்பர்கள் மத்தியில் நடந்த திருமணம்தான். எங்களிடம் திருமண புகைப்படம் கூட கிடையாது.!" என்று உருக்கமாக பேச, உடனடியாக விஜே பிரியங்கா,"நீங்கள் இருவரும் மணக்கோலத்தில் தயாராகுங்கள்.. உங்களுக்கு இங்கு திருமணம் நடக்கப் போகிறது" என்று கூறினார்.

இதனைத் தொடர்ந்து அவர்கள் இருவரும் மணக்கோலத்தில் வந்தனர். விஜய் டிவி BB Jodigal 2 நிகழ்ச்சி அரங்கத்தில் இவர்கள் இருவரும் மீண்டும் மாலை மாற்றிக் கொண்டனர். அதன் பின்னர் தாமரை செல்வி, "இதை மறக்கவே முடியாது" என்று குறிப்பிட்டு கண்ணீர் மல்க நன்றி சொல்லி பேசினார். இப்போது இவர்களுக்கு ஒரு திருமண புகைப்படம் கூட ரெடி ஆகிவிட்டது. வாழ்த்துக்கள் - தாமரைசெல்வி பார்த்தசாரதி என ரசிகர்கள் கூறி வருவதும் குறிப்பிடத்தக்கது!

பிற செய்திகள்

சமூக ஊடகங்களில்:

Advertisement

Advertisement

Advertisement