• Apr 28 2024

அவர்கள் விட்ட சாபம் தான் வடிவேலுவின் காமெடி ஒர்க்கவுட் ஆகாமல் போனதற்கு காரணமா?- அடப் பாவமே.....இப்படியொரு நிலமையா?

stella / 6 months ago

Advertisement

Listen News!

வாழ்க்கை நடத்த மக்கள் பிஸியாக டென்ஷனாக ஓடிக் கொண்டிருப்பவர்களின் முகத்தில் சிரிப்பை வரவைப்பது என்பது சாதாரண விஷயம் கிடையாது.அப்படி டென்ஷனாக இருப்பவர்களுக்கு ஒரு வரப்பிரசாதமாக தனது காமெடி காட்சிகள் மூலம் சிரிக்க வைத்து வருபவர் தான் நடிகர் வடிவேலு.

இடையில் சில காரணங்களால் நடிக்காமல் இருந்தவர் இப்போது மீண்டும் விறுவிறுப்பாக நடித்து வருகிறார். அண்மையில் மாமன்னன் படத்தில் சிறந்த கதாபாத்திரத்தில் நடித்து அசத்தியிருந்தார்.இது தவிர அண்மையில் வெளியாகிய சந்திரமுகி 2 திரைப்படத்தில் நடித்திருந்தார்.ஆனால் இப்படத்தில் இவருடைய காமெடி பெரிதாக வேலை செய்யவில்லை என்று கூறி வருகின்றனர்.


இந்த நிலையில் ஷங்கர், சிம்புதேவன் போன்றோர் விட்ட சாபம் தான் வடிவேலு ரீ என்ட்ரி கொடுத்து நடித்து வந்தாலும் அது பெரும் ஏமாற்றத்தைக் கொடுத்திருக்கின்றது.

அதனாலேயே இப்போது ரசிகர்கள் காமெடி என்ற பெயரில் அவர் கடுப்பேத்தி வருகிறார் என்றும் இனிமேல் வடிவேலுவின் சாப்டர் க்ளோஸ் என்றும் கூறுகின்றனர். அது மட்டுமல்லாமல் ஓவர் தலைகனத்துடன் ஆடிக்கொண்டிருப்பது அவருக்கு நல்லதல்ல என்ற கருத்துக்களும் எழுந்து வருகிறது.


அந்த அளவுக்கு வைகை புயல் பாராபட்சம் பார்க்காமல் அனைவரிடமும் சண்டை இழுத்து வைத்திருக்கின்றார்.அதையெல்லாம் ஓரம் கட்டினால் தான் இந்த செகண்ட் இன்னிங்ஸ் அவருக்கு கை கொடுக்கும். தற்போது அடுத்தடுத்த படங்களில் கமிட் ஆகி வரும் இவருடைய காமெடி இதே பாணியில் இருந்தால் ரீ என்ட்ரி ஆட்டம் கண்டுவிடும் என்பது தான் உண்மை என்பதும் குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement

Advertisement