திரையுலக வாழ்க்கையில் இப்படி மட்டும் தான் நடிப்பது என்று இல்லாமல் எப்படிஜயும் நடித்து மக்களை மகிழ்ச்சியில் ஆழ்த்துபவர் தான் நடிகர் விக்ரம்.இவர் நடித்த பல படங்கள் அடுத்தடுத்து ரிலீசுக்கு தயாராகி வருகின்றன. பொன்னியின் செல்வன், கோப்ரா, துருவ நட்சத்திரம் என அனைத்தும் அதிகம் எதிர்பார்க்கப்படும் படங்களாக இருந்து வருகின்றன.
மேலும் இதில் ரசிகர்கள் பல ஆண்டுகளாக அதிகம் எதிர்பார்க்கப்படும் படமாக உள்ளது கோப்ரா, அஜய் ஞானமுத்து எழுதி, இயக்கிய ஆக்ஷன் த்ரில்லர் படமான கோப்ரா படத்தை செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோ பேனரில் லலித்குமார் தயாரித்துள்ளார்.
விக்ரம் முதல் முறையாக அதிக கெட்டப்களில் நடித்துள்ள இந்த படம் ஆகஸ்ட் 11 ம் தேதி ரிலீஸ் செய்யப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.. இந்த படத்தை உதயநிதி ஸ்டாலினின் ரெட் ஜெயண்ட் முவிஸ் வெளியிட உள்ளது. சேட்டிலைட் உரிமத்தை கலைஞர் டிவி வாங்கி உள்ளது.
கோப்ரா படத்தின் முலம் கிரிக்கெட் வீரர் இர்ஃபான் பதான் நடிகராக, அதுவும் வில்லனாக அறிமுகமாகவுள்ளார். ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ள இந்த படத்திற்கு தாமரை, பா.விஜய், விவேக் ஆகியோர் பாடல் எழுதி உள்ளனர். ஏப்ரல் 22 ம் தேதி கோப்ரா படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிளாக பா.விஜய் வரிகளில் வகு மழன் பாடிய அதீரா பாடல் வெளியிடப்பட்டது.
எனினும் இதைத் தொடர்ந்து இன்று செகண்ட் சிங்கிளாக உயிர் உருகுதே பாடல் மாலை சரியாக 6 மணிக்கு வெளியிடப்படும் என படக்குழு ஏற்கனவே அறிவித்தது. ஃபர்ஸ்ட் சிங்கிள் மாஸ் பாடலாக அமைந்துள்ள நிலையில், செகண்ட் சிங்கிள் காதல் பாடலாக வெளியிடப்படவுள்ளதால் ரசிகர்கள் அதிக ஆர்வத்துடன் காத்திருந்தனர்.
ஆனால் திடீரென கடைசி நிமிடத்தில் கோப்ரா பாடல் வெளியீடு கொஞ்சம் தாமதமாகிறது.அத்தோடு இரவு 8 மணிக்கு பாடல் வெளியிடப்படும் என செவன் ஸ்க்ரீன் ஸ்டுடியோ தனது ட்விட்டரில் அறிவித்துள்ளது. ஆனால் இந்த தாமதத்திற்கு என்ன காரணம் என சொல்லவில்லை. இதனால் ரசிகர்கள் அப்செட்டாகி, திட்டி தீர்த்து வந்தனர்.
தாமரையின் வரிகளில் ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்து பாடிய உயிர் உருகுதே பாடல் இரவு 8 மணிக்கு வெளியிடப்பட்டது. மனதை கரைக்கும் வரிகள், இதமான காட்சிகள், காதல் சொட்டும் உணர்வுகள் என உருவாக்கப்பட்டுள்ள இந்த பாடல் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.அத்தோடு வெளியிடப்பட்ட சிறிது நேரத்திலேயே இந்த பாடலுக்கு லைக்குகள் ஆயிரக்கணக்கில் குவிந்து வருகிறது.
Listen News!