• May 19 2024

தமிழக வரலாற்றை மாற்றியமைத்த விஜயகாந்த்.. இனி இப்படி தான் நடக்கும்! பிரேமலதா விஜயகாந்த் கூறிய முக்கிய ரகசியம் ?

Aathira / 4 months ago

Advertisement

Listen News!

தலைவர் விஜயகாந்தின் இறுதி சடங்கு மிகவும் நல்ல முறையில் நடைபெற்று முடிந்தது .  அவர் சம்பாதித்த சொத்தை விட அவர் மக்களிடம் அன்பை தான் அதிகம் சம்பாதித்துள்ளார் . அந்த அளவுக்கு வெள்ளம் போல மக்கள் கூட்டம் திரண்டு இறுதி  பயணம் முடிவடைந்தது . 

இவ் சமயத்தில் கேப்டனின் மனைவியான பிரேமலதா விஜயகாந்த் கூறியதாவது , 


இதுவரை தமிழக அரசியல் வரலாற்றில் எந்த ஒரு தலைவருக்கும் கிடைக்காத இடத்தை கொடுத்துள்ளீர்கள் . இரண்டு நாட்களில் 15லட்சம் பெயர் பேர் கலந்துகொண்டதாக புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன . இது போன்ற எமோஷனலான மக்கள் கூட்டத்தை தமிழகம் முதல் முறையாக சந்திக்கிறது . இதற்கு கேப்டன் அவர்கள் செய்த தர்மம் தான் காரணம் என்று தே.மு .தி .க பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் கூறியுள்ளார் .

மேலும், தலைவர் விஜயகாந்தின் சமாதியை கோவிலாக மாற்றப்போவதகவும், 24 மணிநேரமும் அவரை  தொண்டர்கள் வழிபாடும் வகையில், தினமும் விளக்கேற்றி பூக்களால் அலங்கரிக்கப்போவதாகவும் கூறியுள்ளார். 

Advertisement

Advertisement