• Jul 07 2024

மலேசியா சென்றும் முருகன் கோவிலுக்கு செல்ல முடியாத விஜய் சேதுபதி.. கொஞ்ச நஞ்ச பேச்சா பேசினாரு..!

Sivalingam / 1 month ago

Advertisement

Listen News!

சமீபத்தில் மலேசியாவில் விஜய் சேதுபதி நடித்த 'ஏஸ்’ என்ற படத்தின் படப்பிடிப்பு நடந்த நிலையில் மலேசிய முருகன் கோவிலிலும் சில காட்சிகள் படமாக்கப்பட்டதாக கூறப்படுகிறது. இருப்பினும் மலை மீது ஏறி முருகனை தரிசனம் செய்ய வேண்டும் என்று விஜய் சேதுபதி விரும்பியதாகவும் ஆனால் சந்தர்ப்பம் கிடைக்காததால் மற்றும் கூட்டம் அதிகமாக இருந்ததால் அவரால் தரிசனம் செய்ய முடியவில்லை என்று கூறப்படுகிறது.

இயக்குனர் ஆறுமுக குமார் இயக்கத்தில் விஜய் சேதுபதி மற்றும் ருக்மணி வசந்த், நடிப்பில் உருவாகி வரும் 'ஏஸ்’ என்ற படத்தின் படப்பிடிப்பு கடந்த சில வாரங்களாக மலேசியாவில் நடைபெற்று வந்தது. முழுக்க முழுக்க மலேசியாவில் படமாக்கப்பட்ட இந்த படத்தில் மலேசிய முருகன் கோவிலில் சில காட்சிகள் படமாக்கப்பட்டுள்ளது. ஆனால் மலைக் கோவில் அடிவாரத்தில் மட்டுமே படப்பிடிப்பு நடத்த முடிந்ததாகவும் மலை மீதேறி படப்பிடிப்பு நடத்த முடியவில்லை என்றும் கூறப்படுகிறது.

இந்த நிலையில் ஏராளமான படிகள் கொண்ட மலை மீது ஏறி முருகனை தரிசனம் செய்ய வேண்டும் என்று விஜய் சேதுபதி விரும்பியதாகவும் ஆனால் கூட்டம் காரணமாக அவரால் முருகனை தரிசனம் செய்ய முடியவில்லை என்றும் இதனால் ஏமாற்றத்துடன் அவர் சென்னை திரும்பி விட்டதாகவும் கூறப்படுகிறது.

இந்த செய்திக்கு கமெண்ட் அளித்துள்ள ரசிகர்கள் ’இந்து மதம் குறித்து அவ்வப்போது கேலியும் கிண்டலும் செய்யும் விஜய் சேதுபதிக்கு முருகனை தரிசனம் செய்ய கொடுத்து வைக்காதது ஆச்சரியப்படுவதற்கு இல்லை என்றும் அவர் பல நேரங்களில் பல மேடைகளில் இந்து மதம் குறித்தும் இந்து கடவுள் குறித்தும் கிண்டல் செய்துள்ளார் என்றும் நெட்டிசன்கள் பதிவு செய்து வருகின்றனர்.

விஜய் சேதுபதி, ருக்மணி வசந்த், திவ்யா பிள்ளை, யோகி பாபு, முத்துக்குமார், ராஜ்குமார், உள்ளிட்ட பலர் நடித்துள்ள இந்த படத்தை ஆறுமுக குமார் இயக்கி தயாரித்து உள்ளார். இவர் ஏற்கனவே விஜய் சேதுபதி நடித்த ’ஒரு நல்ல நாள் பார்த்து சொல்றேன்’ என்ற படத்தை இயக்கியவர் என்பது குறிப்பிடத்தக்கது. ஜஸ்டின் பிரபாகரன் இந்த படத்திற்கு இசையமைத்துள்ளார்.

Advertisement

Advertisement